புத்தி சொல்கிறேன்.
புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்;
இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
(ரோமர் 12:8)
1)*"புத்தி சொல்லுதல்"* தேவனுடைய வார்த்தையைக் கேட்கிறவர்களின் இருதயம், மனசாட்சி, சித்தம் ஆகியவற்றைத் தொட்டு, விசுவாசத்தை தட்டியெழுப்பி, உலகத்திலிருந்து அவர்கள் முற்றும் பிரிந்திருப்பதையும் கிறிஸ்துவுக்குள் ஆழமான ஒப்புக்கொடுத்தலையும் உண்டாக்குமாறு, தேவனுடைய வார்த்தையைப் பிரஸ்தாபப்படுத்தும் படி தேவனால் அருளப்படும் விருப்பம், தகுதி, வல்லமையாகும்.
(அப் 11:23;14:22;15:30-32; 16:40;
1கொரி 14:3; 1தெச 5:14-22;எபி 10:24-25).
2*"கொடுத்தல்"*
என்பது தேவனால் அருளப்பட்ட விருப்பம், தகுதி, வல்லமை ஆகியவையாகும்.
ஏனென்றால் தேவனுடைய வேலைக்காகவோ, அவருடைய மக்களுக்காகவோ, தாராளமாக தன்னுடைய சொந்த ஆசியிலிருந்து கொடுக்கும்படியாக, ஒருவரிடம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு மேலான வருமானம் உள்ளது.
(2 கொரி 8:1-8; எபே 4:28).
அதை உற்சாகமாக தேவனுடைய வேலைக்காக கொடுக்க வேண்டும்.
3)*"ஆளுகை செய்தல்"அல்லது "தலைமைத்துவம்"*
என்பது மெய்ப்பனின் வேலையைச் செய்யவும், எல்லாருடைய ஆவிக்குரிய நன்மைகளுக்காகவும் சபையில் செய்யப்படும் பலவிதமான செயல்களையும் சரியாக நடக்கவும் மேற்பார்வையிடவும், தேவன் அருளும் விருப்பம், தகுதி வல்லமையாகும்.
(எபே 4:11-12; 1தீமோ 3:1-7;எபி 13:7,17,24;)
4)*"இரக்கம்"* என்பது தேவையோடு அல்லது கவலையோடு இருப்பவர்களுக்கு உதவியாயும், ஆறுதலாயும் இருக்கும்படி தேவன் அருளும்
விருப்பம், தகுதி, வல்லமையாகும்.
(எபே 2:4).
*புத்தி சொல்லுதல், கொடுத்தல், ஆளுகை செய்தல், இரக்கம் காட்டுதல், இவை எல்லாமே தேவன் நமக்கு அருளுகிற விருப்பம், தகுதி, வல்லமையாகும்,* என்பதை புரிந்து கொண்டால் தான் பெருமையில் விழுந்து போகாமல் தேவனிடத்தில் நாம் தாழ்மைப்பட்டு இருப்போம் என்பதை உணர்த்துகிறது.
தொடர்ந்து நாம் ஜெபிப்போம் வசனங்களை கவனிப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments