Posts

Showing posts from March, 2026

தகுதியாகுமா...

Image
திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் ஒரு கிராமத்தில் எபினேசர் என்ற ஒரு ஊழியர் இருந்தார். அவருக்கு மனைவியும் பிள்ளைகளும் இருந்தனர் இந்த சமயத்தில் இன்னொருவர் மனைவியையும் அவர் சேர்த்துக் கொண்டார். இதைக் கேட்ட முதல் மனைவி அடித்து கீழ்பாக்கம் மனநிலை பாதிக்கப்பட்ட ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டார் அதன் பின்பு அந்த பெண்ணோடு வாழ்ந்து மரித்துவிட்டார். அதற்குப் பிறகு அவருடைய மகன் ஐசக் பாபு என்பவர் அந்த ஊழியத்தை எடுத்துக் கொண்டார். அவருக்கும் ஒரு மனைவி ஒரு மகள் உண்டு தற்பொழுது அதை விட்டுவிட்டு இன்னொரு திருமணத்தை செய்து கொண்டார் அதுமாத்திரமல்ல தகப்பன் விட்டு சென்ற மனைவியையும் அவர் வைத்துக் கொண்டார். இவர் சபை நடத்துவதற்கு தகுதியானவரா ? இப்படிப்பட்ட ஊழியர்கள் இன்றைக்கு பெருகி காணப்படுகிறார்கள். திருச்சபையில் வல்லமை காணப்படவில்லை என்றால் இப்படிப்பட்டவருடைய ஊழியங்கள் இன்று பெருகி இருக்கிறது.  இதைத்தான் 1 கொரிந்தியர் 5-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை நடவடிக்கை மற்றும் பாவம் குறித்த எச்சரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஏழு முக்கிய குறிப்புகளை கவனிக்க வேண்டும் ....

இதுதான் தரிசனமா ?

Image
தரிசனமா இது... ஆரம்ப காலத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை உலகம் எங்கும் அறிவிக்க அழைக்கப்பட்ட ஊழியர்கள், திடீரென மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளி வளாகங்கள், ஆடம்பர சபை கட்டிடங்கள், அறக்கட்டளைகள், முதியோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள், ஏழைகளுக்கு உதவும் கரங்கள் என ஆண்டவர் எனக்கு தரிசனம் கொடுத்து விட்டார் என்று சபை நடத்துவதோடு இதையும் சேர்த்து நடத்துவது தரிசனமா ? உண்மையாகவே இது ஒரு லாப நோக்கமற்ற கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் அன்பை வெளிப்படுத்தும் பணிதானா ? மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் தொழில்நுட்பங்களும் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சொல்லி அவர்களை பிடிக்கிற வலையாக இருக்கிறதா அல்லது பணத்தை சம்பாதிக்கிற முதலீடுயாக இருக்கிறதா ? சபை கட்டடங்கள், மருத்துவமனைகள் அல்லது கல்வி நிறுவனங்களைக் கட்டுவது என்பது வேதத்தின் அடிப்படையில் ஒரு "ஊழியத் தரிசனமாக" இருக்க முடியுமா என்பது குறித்து வேதம் மற்றும் திருச்சபை வரலாறு அளிக்கும் பார்வைகள். பரிசுத்த வேதத்தின்படி, இவை சுவிசேஷ ஊழியத்திற்குத் துணையாக இருக்கும் கருவிகள் (Service or Compassion Ministry) என்று அழைக்கப்படுகின்றன. 1. இய...

கிறிஸ்தவர்களுக்கு வரப் போகிற ஆபத்துகளும் மற்றும் எழுப்புதலும்.

Image
கிறிஸ்தவர்களுக்கு வரப் போகிற ஆபத்துகளும் மற்றும் எழுப்புதலும். வேதாகம வசனங்களின் அடிப்படையில், கடைசி நாட்களில் கிறிஸ்தவர்கள் சந்திக்க நேரிடும் என்று சொல்லப்பட்டுள்ள சில முக்கிய சவால்கள் மற்றும் ஆபத்துகள். மிகுந்த உபத்திரவம்: விசுவாசிகள் தங்கள் விசுவாசத்திற்காக உலகளாவிய ரீதியில் துன்புறுத்தப்படுவார்கள்  (மத்தேயு 24:9; யோவான் 16:33). கள்ளத் தீர்க்கதரிசிகள்: பலரை வஞ்சிக்கக்கூடிய கள்ளப் போதகர்களும், கள்ளக் கிறிஸ்துக்களும் தோன்றுவார்கள் (மத்தேயு 24:11;  2பேதுரு 2:1). அன்பு தணிந்து போதல்:  அக்கிரமம் மிகுதியாவதால், விசுவாசிகளிடையே ஒருவருக்கொருவர் இருந்த அன்பு குறைந்து போகும் (மத்தேயு 24:12). குடும்பப் பிரிவினைகள்: விசுவாசத்தின் நிமித்தம் சொந்தக் குடும்பத்தினரே ஒருவருக்கொருவர் விரோதிகளாக மாறுவார்கள்  (லூக்கா 21:16; மத்தேயு 10:35-36). விசுவாச துரோகம்: சோதனைகளைத் தாங்க முடியாமல் பலர் விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்  (1 தீமோ4:1). சுயநலம் மற்றும் பெருமை:  மனிதர்கள் தற்பிரியர்களாகவும், பணப்பிரியர்களாகவும், வீண்பெருமைக்காரர்களாகவும் மாறுவார்கள்...

தேவைகளில் தேவனின் திட்டம்(1)

Image
மனிதர்களுக்கு தேவைகள் ஏராளம் ஏராளம். அந்தத் தேவைகளில் தெய்வத்திட்டங்களும் ஏராளம் ஏராளம். என்பதை ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளும் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் போது தான் நம்முடைய தேவைகளில் தேவனுடைய தேவை என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும். பழைய ஏற்பாட்டில் அன்னாள் (Hannah) மேற்கொண்ட ஜெபம் மற்றும் அவரது வாழ்வின் மாற்றங்கள் குறித்த முக்கிய குறிப்புகள்.   பிள்ளைப் பேறு (சந்ததி):  அன்னாளுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. ஒரு தாயாக மாற வேண்டும் என்பதே அவரது முதல் தேவையாக இருந்தது  (1 சாமுவேல் 1:11)  மன அமைதி:  தனது சக்களத்தியான பெனின்னாள் தன்னை வேதனைப்படுத்தியதால், அன்னாள் மிகுந்த மனவேதனையுடன் இருந்தார். அந்த நிந்தனையிலிருந்து விடுதலை அவருக்குத் தேவையாக இருந்தது (1 சாமுவேல் 1:6-7)  தேவனின் அங்கீகாரம்:  "தேவரீர் உமது அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து..." என்று அவர் ஜெபித்தார். தேவன் தன்னை மறவாமல் நினைக்க வேண்டும் என்பதே அவரது ஆழ்ந்த தேவையாக இருந்தது  (1 சாமுவேல் 1:11)  தேவனின் தேவை - ஒரு விசுவாசமுள்ள ஊழியக்காரன...

மகளை இழந்த ஒரு தகப்பனின் ஒப்பாரி.

Image
மகள்களை  இழந்த தகப்பன்மார்களே வாருங்கள் ஒன்று கூடி ஒப்பாரி வைப்போம்.... இந்த வலி எனக்கு புதிதும் இதயத்தை குத்தும் கூர்மையான அம்புமாக இருக்கிறது....... விழுந்தவனுக்கும் இழந்தவனுக்கும் இளைப்பாறுதல் கொடுக்கும் எம்பெருமான் எனக்கு இளைப்பாறுதல் கொடுப்பாரா... ஊழியங்களை தவிர ஒன்றுமே தெரியாத அப்பாவி அப்பாவை விட்டு..... எங்கே போனாய் மகளே.... வீட்டில் உன் நினைவுகள் சபையில் உன் நினைவுகள் ரயில் நிலையத்தில் உன் நினைவுகள்... விமான நிலையத்தில் உன் நினைவுகள்.... சாப்பிடும் போதும் உன் நினைவுகள்..... எங்கேயும் எப்போதும் உன் நினைவுகளே.... நினைவுகளே நினைவுகளே உங்களுக்கு சாவு வராமல் என் பிள்ளைக்கு வந்தது என்ன? அழுவதற்கு பெலன் இல்லையம்மா என் தங்கமே.... உன்னை இழந்த இந்த பாவி ஆறுதல் இல்லாமல் அலைகிறேன் என் செல்லமே.... திடீரென நீ வந்திடுவாயா என்று பால்கனியில் நின்று பார்க்கிறேன்... மகள் வந்து விட்டாள் என்று ஆசையாக கதவை திறக்கும் நான் படபடப்புடன் திறக்கிறேன்..... என்னை நீ தானே அடக்கம் செய்யனும்.. அது தானே இறை நீதி...... உன்னை அடக்கம் செய்யும் இந்த கொடிய தண்டனை திடீரென விழுந்துவிட்டதே..... பேச முடி...

கிறிஸ்துவ வாழ்வு என்பது கொண்டாட்டத்திலா இருக்கிறது.!

Image
கிறிஸ்தவ வாழ்வு என்பது வெறும் பண்டிகைகளைக் கொண்டாடுவது மட்டுமல்ல. இயேசு கிறிஸ்துவின் பிறப்பும், உயிர்த்தெழுதலும் (ஈஸ்டர்) மிக முக்கியமான அடிப்படை அஸ்திவாரங்கள் என்றாலும், வேதம் ஒரு விசுவாசியின் அன்றாட வாழ்வு மற்றும் நோக்கம் குறித்து அதிகப்படியான போதனைகளை வழங்குகிறது.  வேதம் வலியுறுத்தும் சில முக்கிய போதனைகள் வசன ஆதாரங்களுடன் தருகிறேன் கவனிங்கள்.  அன்பே பிரதானம்:  தேவன் அன்பாகவே இருக்கிறார். நாம் தேவன் மீதும், பிறர் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதே வேதத்தின் மையப்பொருள். வசனம்:  "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும்... அன்புகூருவாயாக... உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக." (மத்தேயு 22:37-39) மறுபிறப்பு மற்றும் இரட்சிப்பு:  இயேசுவை மீட்பராக ஏற்றுக்கொண்டு, பாவ வாழ்வை விட்டுப் புதிய மனிதனாக மாறுவது அவசியம். வசனம்:  "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்." (யோவான் 3:3) பாவ மன்னிப்பு மற்றும் கிருபை:  நம்முடைய கிரியைகளால் அல்ல, தேவனுடைய கிருபையினால் மட்டுமே நாம் மன்னிக்கப்ப...

அற்புதங்கள் அடையாளங்கள் மூடநம்பிக்கையா !!!

Image
மும்பையில் நடந்த சுவிசேஷ கூட்டத்தில் மூடநம்பிக்கைகளை குறித்து பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் வேதத்தில் நடந்த அற்புதங்கள் மற்றும் இயேசு கிறிஸ்து மூலமாக நடந்த அற்புதங்கள் அப்போஸ்தலர்கள் மூலமாக நடந்த அற்புதங்கள் இவை அனைத்தும் மருத்துவ ரீதியான அல்லது விஞ்ஞானத்திற்கு எதிரான மூடநம்பிக்கை என்று சொல்லப்படுகிறது. புரியும்படி சொல்ல போனால் இந்து முன்னணியினர் மற்றும் பிஜேபினர் நீங்கள் வைத்திருக்கிற வேதம் மூடநம்பிக்கையை போதிக்கிறது எனக் கூறி வருகிறார்கள். இனிவரும் நாட்களில் மூடநம்பிக்கையை போதிக்கும் வேதம் யார் கையிலும் இருக்கக் கூடாது என சட்டங்கள் ஏற்றலாம். சிறு சிறு சபைகளை குறி வைத்து இப்படிப்பட்ட சட்டங்களை இயற்றி சபைகளை மூடலாம். இதுதான் பாஜகவின் மற்றும் அதனை சார்ந்த ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி எடுக்கும் அதிதீவிர முடிவுகளாகும் திருச்சபையே நீ இன்னும் உன்னுடைய பிரச்சினைகளையும் உன்னுடைய தேவைகளையும் பார்த்துக் கொண்டு யாருக்கோ நடக்கிறது என்று நீ தூங்கிக் கொண்டிருப்பாய் ஆனால் உனக்கும் இது நேரிடும் என்பது மறவாதே. உண்மையாகவே இயேசு கிறிஸ்த...

இயேசு உண்மையாகவே மூன்று நாள் கல்லறையில் இருந்தாரா ?

Image
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தது முதல் உயிர்த்தெழுந்தது வரையிலான நேரத்தைக் கணக்கிடும்போது, வேதாகமக் குறிப்புகளின்படி (மத்தேயு 12:40 - "மூன்று பகலும் மூன்று இரவும்") துல்லியமான காலவரிசைகள். 1. மரணம் (வெள்ளிக்கிழமை பிற்பகல் - மாலை 3:00 மணி): இயேசு சிலுவையில் தொங்கும்போது மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பூமி எங்கும் இருள் உண்டானது. சரியாக ஒன்பதாம் மணி நேரத்தில் (மாலை 3:00 மணி) "முடிந்தது" என்று கூறி அவர் உயிர் துறந்தார். வசனம்:  "ஒன்பதாம் மணிநேரத்தில் இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்... இயேசு மகா சத்தமிட்டு ஜீவனை விட்டார்." (மாற் 15:34-37).  2. அடக்கம் பண்ணப்படுதல் (வெள்ளிக்கிழமை மாலை 5:00 - 6:00 மணிக்குள்): யூதர்களுடைய ஓய்வுநாள் (சப்பாத்து) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கும். அதற்கு முன்பாகவே அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தைப் பெற்று, மெல்லிய துப்பட்டியில் சுற்றி, கல்லில் வெட்டப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்தார். வசனம்:  "சாயங்காலமானபோது... அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சர...

பால் தினகரன் மீது வழக்கு பதிவு.

Image
இயேசு அழைக்கிறார் (Jesus Calls) அமைப்பின் தலைவர் பால் தினகரன் மற்றும் அவரது மகன் சாமுவேல் தினகரன் மீது மும்பை போலீசார் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தின் (Maharashtra Anti-Black Magic Act) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  வழக்கின் முக்கிய விவரங்கள்: முக்கிய காரணம்:  மார்ச் 2026-ல் மும்பை மீரா ரோடு மற்றும் சாங்லி பகுதிகளில் நடைபெற்ற 'மகாராஷ்டிரா பிரார்த்தனை திருவிழா' நிகழ்வில், பிரார்த்தனை மூலம் தீராத வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று அமானுஷ்ய மற்றும் பொய்யான வாக்குறுதிகள் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மருத்துவக் கோரிக்கைகள் (Medical Claims):  (மூடநம்பிக்கையான ஜோதிடம் பார்ப்பது அல்லது ராசி கற்கள் விற்பது ஒரு நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது). ஆனால், "தீராத வியாதிகளைக் குணப்படுத்துவோம்" (Healing claims) என்று மேடையில் அறிவிக்கும்போது, அது மருத்துவ மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுகள் (தடைசெய்யப்பட்ட விளம்பரங்கள்) சட்டம், 1954-ன் கீழ் குற்றமாகிறது. புற்றுநோய் போன்ற நோய்களை ஜெபத்தால் குணப்படுத்தலாம் என்று கூறுவது சட்டப்படி கடுமையான விதிமீறலாகும...

ஆர் எஸ் எஸ் கிறிஸ்தவத்தை ஏன் எதிர்க்கிறது.

Image
ஆர்.எஸ்.எஸ் (RSS) போன்ற அமைப்புகள் கிறிஸ்துவத்தை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுக்காததற்கான பின்னணிகள் குறித்து பல்வேறு சமூக மற்றும் அரசியல் பார்வைகள் உள்ளன:  கிறிஸ்துவத்தை எதிர்க்கும் காரணங்கள்: மதமாற்றப் புகார்கள்:  கிறிஸ்துவ மிஷனரிகள் ஏழை மற்றும் பழங்குடியின மக்களைக் குறிவைத்து, ஆசை வார்த்தைகள் காட்டியோ அல்லது வற்புறுத்தியோ மதமாற்றம் செய்வதாக ஆர்.எஸ்.எஸ் குற்றம் சாட்டுகிறது. இது நாட்டின் மக்கள்தொகை கட்டமைப்பை (Demography) மாற்றிவிடும் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். கலாச்சார ஒருமைப்பாடு:  இந்தியா ஒரு 'இந்து தேசம்' என்றும், இங்கு வாழும் அனைவரும் கலாச்சார ரீதியாக இந்துக்களே என்றும் ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. கிறிஸ்துவம் போன்ற மதங்கள் மேலைநாட்டு கலாச்சாரத்தைப் புகுத்தி, இந்தியத் தொன்மையைச் சிதைப்பதாக அவர்கள் விமர்சிக்கின்றனர். தேசிய பாதுகாப்பு:  மதம் மாறுபவர்களின் விசுவாசம் நாட்டின் மீது குறையக்கூடும் என்றும், இது பிரிவினைவாத எண்ணங்களுக்கு வித்திடும் என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவ்வப்போது கருத்துத் தெரிவிக்கின்றனர்.  அர...

துர்க்குணத்தில் உருவானேன்.

Image
தாவீது, "இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்" (சங்கீதம் 51:5) என்று கூறுவது வேத வசனத்தின்படி  சரிதான்.  இது மனிதகுலம் பிறப்பிலேயே  பாவம் மற்றும் அக்கிரமத்தோடு (Original Sin) தொடர்புடையது என்பதையும், கர்த்தரின் கிருபைக்காக மனிதன் முழுமையாக சார்ந்திருக்க வேண்டிய அவசியத்தையும் குறிக்கிறது.  இதன் முக்கிய விளக்கங்கள்: பிறப்பிலேயே பாவம்:  இந்த வசனம் தாவீது தான் பிறக்கும் முன்பே பாவம் செய்யக்கூடிய சுபாவத்தோடு (Sinful Nature) இருந்ததை ஒப்புக்கொள்கிறார். **பாவ மன்னிப்பு: ** தாவீது தன் பாவம் எவ்வளவு ஆழமானது என்பதை உணர்ந்து, அதை மறைக்காமல் தேவனிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறவிப் பாவம் (Original Sin):  இது மனிதன் பிறக்கும்போதே பாவ இயல்புடன் பிறக்கிறான் என்பதைக் குறிக்கிறது  ஆதாம் செய்த பாவத்தினால் முழு மனிதகுலமும் கடவுளை விட்டுப் பிரிந்து, பாவத்தில் விழும் தன்மையுடனேயே உருவாகிறது என்பதை இது உணர்த்துகிறது  தன்னிலை விளக்கம்:  தாவீது தான் செய்த குறிப்பிட்ட பாவத்திற்காக (பத்சேபாளுடனான உறவு) வருந்து...

கடன் வாங்காதிருப்பாயாக

Image
முழுஉலகத்தையும் அடிமைத்தனத்திற்குள் தள்ளும் கடன் சுமை ஒவ்வொரு மனிதன் மேலும் சுமார் மூன்று லட்சம் கடன் நம் நாடு வாங்கி இருப்பதாக தகவல். அது மாத்திரம் அல்ல ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றுவதற்காக பல லட்சங்களை கடனாக பெற்று வாழ்கிறதையும் காண முடிகிறது. உலகத்திற்கு இது சகஜமாக காணப்பட்டாலும் தேவனுடைய பிள்ளைகளுக்கு இது "மாபெரும் கண்ணி" என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்குவது வேதத்தின் படி விசுவாச குறைவாகவே காணப்படுகிறது விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாய் வாழ முடியாது என்பதையும் வேதாகமம் நமக்குச் சொல்கிறது. 'நீயோ கடன் வாங்காதிருப்பாயாக' (உபா 28:12). கடன் அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும்:   கடன் வாங்குகிறவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமையாகிறான் என்று வேதாகமம் எச்சரிக்கிறது (நீதி 22:7). திரும்பச் செலுத்த வேண்டிய கடமை:   கடன் வாங்கினால் அதைத் திரும்பக் கொடுப்பது அவசியம். கொடுக்காமல் இருப்பது துன்மார்க்கத்தனம் என வேதாகமம் கூறுகிறது (சங்கீதம் 37:21). அன்பைத் தவிர வேறு கடன் இருக்கக்கூடாது:   ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே ஒழ...

அவன் வீட்டாரே சத்துரு

Image
ஒரு குடும்பத்தில் உள்ளவர்களே ஒருவருக்கொருவர் சத்துருவாக ... கர்த்தருடைய ஊழியத்திலும் ஒரு ஊழியருக்கு இன்னொரு ஊழியர் சத்துருவாக..... ஒரு வருடத்திற்கு முன்பு ஆரலூர் பந்தநல்லூர் கிராமத்திலுள்ள கவர்மெண்ட் ஸ்கூல் அருகாமையில் ஒரு சுவிசேஷ கூட்டத்தை ஒரு ஊழியர் ஆயத்தப்படுத்தி இருந்தார். அதே பகுதியில் ஊழியம் செய்த ஒருவர் கிராம நிர்வாகிகளுக்கும், மற்றும் காவல்துறைக்கும் புகார் கொடுத்தார். புகார் கொடுத்து கூட்டத்தையே நிறுத்திவிட்டார். அது முடிந்து ஓராண்டுகள் ஆனாலும் தற்போதும் நாங்கள் புகார் கொடுத்தும் நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று மறுபடியும் புகார் நோட்டீஸ் கொடுக்கிறார். வேதத்தில் பிசாசு தான் பொல்லாதது என்று பார்க்கிறோம். ஆனால் பொல்லாத ஊழியர்கள் சாத்தானை விட மோசமானவர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  "ஒருவனுக்கு அவன் வீட்டாரே சத்துரு" (மத்தேயு 10:36) என்ற வசனத்தின் அடிப்படையில், வேதாகமத்தில் உள்ள சில முக்கிய உதாரணங்கள் மற்றும் ஆதார வசனங்களுடன். புதிய ஏற்பாடு (New Testament)  இயேசு கிறிஸ்துவின் எச்சரிக்கை:  சொந்த குடும்ப உறுப்பினர்களே ஒருவருக்கொருவ...