பரிசுத்த சகோதரரே
... பரிசுத்த சகோதரரே.
இந்தக் கடிதம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னர் பலவித துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்த யூத கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டது.
(எபி 10:32,-39) இக்கடிதத்தை வாசிப்பவர்கள் உண்மையான மறுபிறப்படைந்த கிறிஸ்தவர்கள் என்பது கீழ்க்கண்ட உண்மையிலிருந்து தெளிவாகும்.
1)(எபி 2:1-4; இந்த வசனங்கள் அவர்கள் இரட்சிப்பையும், விசுவாசத்தையும் விட்டு வழுவிப் போகும் அபாயம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன.
2)(எபி 3:1; இங்கு விசுவாசிகள் அனைவரும் "பரிசுத்த சகோதரரே" என்று அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பரலோக அழைப்பில் பங்கேற்பார்கள்.
3)(எபி 3:6; இங்கே அவர்கள்
"தேவனுடைய வீடு"என்று அழைக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த விசுவாசிகள் அனைவரும் கிறிஸ்துவினால் இரட்சிக்கப்பட்டவர்கள் என்பதற்கு கூடுதல் ஆதாரங்களை கீழ்கண்ட வசனங்களில் காணலாம்.
(எபி 3:12-19; 4:14-16; 6:9-12,18-20; 10:19-25,32-36; 12:1-29; 13:1-6,10-14,20,21).
பரிசுத்த சகோதரரே என்று இந்த கடிதம் கூறுகிறது. அதற்கு பாத்திரவான்களாக நடந்து கொள்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் பெரிய காரியங்களை செய்வார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
தொடர்புக்கு
98 41 711 591.
Comments