Posts

Showing posts from July, 2025

தேவனால் எல்லாம் கூடும்.

 தேவனால் எல்லாம் கூடும். இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். (மத்தேயு 19:26) மனிதனால் இந்த உலகத்தில் செய்ய முடியாத காரியங்கள் எவ்வளவோ இருக்கிறது.  ஆனால்  தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை .( லூக்கா 1:37) என்று வேதம் சொல்லுகிறது.   உலகத்தில் விஞ்ஞானம் எவ்வளவு வளர்ச்சி பெற்று இருக்கிறது பாருங்கள். ஆனால் அவைகளால் மக்களுக்கு என்ன பிரயோஜனம் என்பதை அநேகர் கவனிக்க தவறி விட்டார்கள்.  விஞ்ஞானத்தால் மக்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.  விஞ்ஞானத்தால் மக்களுடைய வியாதிகளை குணமாக்க முடியாது.  விஞ்ஞானத்தால் மக்களுடைய பசியை போக்க முடியாது.  விஞ்ஞானம் மக்களை ஒரு நாளும் பாதுகாக்க முடியாது.  விஞ்ஞானம் எப்போதுமே தன்னுடைய வளர்ச்சியையும், மக்களை அழிக்கும் ஆற்றலையும், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயங்களையும், மக்களை அடிமைப்படுத்தும் ஆற்றலை மட்டுமே கொண்டுள்ளது. ஆகையால் மனிதனால் அநேக பிரச்சினைகளை தீர்க்க முடியாது.  ஆகையால் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், மனுஷனால் கூடாதவைகள் தேவ...

பாவம் செய்யாதிருங்கள்.

 பாவம் செய்யாதிருங்கள். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; (எபேசியர் 4:26) மனிதனுடைய சுபாவத்தில் ஒன்று கோபம். கோபத்தின் மூலமாக பலவிதமான விபரீதங்கள் பல குடும்பங்களில் நடப்பதை நாம் அறிவோம். தேவன் தம் பிள்ளைகளுக்கு  கொடுக்கும் நல் ஆலோசனை என்னவென்றால், கோபப்படுவது தவறல்ல, ஆனால், "கோபங்கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்" என்கிறார். மனிதனுடைய கோபம் ஒருவனை பாவத்துக்குள் தள்ளிவிடுகிறது அது ஒரு நாளும் தேவனுடைய நீதியை செய்யாது.(யாக் 1:20) (கொலோசெயர் 3:8 ஐ வாசி) இப்பொழுதோ " கோபமும் " மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். என பரிசுத்த ஆவியானவர் ஆலோசனை சொல்லுகிறார். "கோபம்" வரும் பொழுது மூர்க்கமும், வாயில் அருவருப்பான வார்த்தைகளும், தூஷணங்களும், இன்னொருவரையும் கோபப்படுத்தக்கூடிய வம்பு வார்த்தைகளும் பிறந்து மிகப்பெரிய கலவரங்களையும் விபரீதங்களையும் செய்து விடுகிறது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு வருந்தி என்ன பயன், ஆகையால், அவைகள...

வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்.

 வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, (எபேசியர்: 3:20) என வாசிக்கிறோம்.  தேவன் எப்பொழுதுமே நாம் வேண்டிக்கொள்கிறதை விட அதாவது நாம் நினைப்பதை விட தேவன் மிகவும் அதிகமாக நமக்கு செய்கிறார்.  (பிலி 4:6)ஐ வாசித்து பாருங்கள். வேண்டுதல் மூலமாக தேவனுக்கு தெரியப்படுத்தப்படும்பொழுது நமது கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. ஆதியாகமம் 29:31 ஐ கவனிக்கும் போது லேயாள் அற்புதமாக எண்ணப்பட்டாள்  உடன் பிறந்த சகோதரி தன் சகோதரியை அற்புதமாக எண்ணும்போது எவ்வளவு பெரிய மனவேதனை நமக்கு உண்டாகிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.  1சாமுவேல் 1 ஆம் அதிகாரத்தில் அன்னாள் என்ற பெண்ணைப் பற்றி வாசிக்கிறோம். அவளுடைய சக்களத்தி அவளை ஒவ்வொரு நாளும் அற்பமாக எண்ணுவது மாத்திரம் அல்ல தினமும் அவள் மனம் உடைந்து போகத்தக்கதாக வார்த்தைகளால் மனமடிவாள்; என பார்க்கிறோம்.(1சாமு 1:6,7) இவர்கள் இருவருமே தங்களுடைய மன வேதனையான கவலையை போக்க ஒரு வழியை தேர்ந்தெடுத்தார்கள் அந்த வழிதான் தேவனிட...

சர்வ வல்லமையுள்ள தேவன்.

 சர்வ வல்லமையுள்ள தெய்வம் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் (வெளி 1:8). அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.(லூக்1:37) உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. (எரே 32:17) உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரே 32:27) இதை விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என வேதம் மூலமாக பரிசுத்த ஆவியானவர் நமக்கு சொல்கிறார்.(மாற் 9:23) சிலர் இயேசு கிறிஸ்து செய்கிற அற்புதங்களை நம்புவதில்லை அதை விசுவாசிப்பதும் இல்லை.  கானாவூர் கல்யாணத்தில் நடந்த அற்புதம் இயேசு கிறிஸ்து செய்த முதல் அற்புதமாகும்.  இந்த அற்புதமானது இயற்கைக்கு அப்பாற்பட்டதாகும் இயற்கை விதிகளுக்கு மாறாக இங்கே இயேசு கிறிஸ்து செயல்படுவதை நாம் கவனிக்க முடிகிறது.  திராட்சை ரசம்    இயற்கையாக திராட்சை விதை விதைத்து அது முளைத்து அது கொடியாக படர்ந்து பின்பு பூத்து, காய்த்து, பழுத்து, பின்பு பறித்து அதை ஆலையில் பிழிந்து, கொதிக்க வைத்து ஆற வைத்து பருகுவது தான் சுவையான திராட்சை ரசம் ஆகும்.  இப்படி நாம் திராட்சை ரசம் பெற வேண்டுமானால் கிட்டத்தட்ட இரண்டு வருடம் காத்திருக்க வேண...

நல்ல திராட்சை ரசம்

  நல்ல திராட்சை ரசம். பழங்கால ஆசிரியர்கள் பலர் கருத்துப்படி 'நல்ல'(நேர்த்தியான) திராட்சரசம் ருசி மிகுந்தது. அதை ஒருவர் ஏராளமாக, தாராளமாக எந்தத் தீங்குமின்றி குடிக்கலாம். (அதாவது குளிக்க வைத்து சர்க்கரைப் பொருள் அழிக்கப்படாத திராட்சரசம்) "விலை குறைவான"திராட்சரசம் என்பது அதிக அளவில் தண்ணீர் கலந்த திராட்சை ரசமாகும்.  1) ரோம ஆசிரியராகிய பிளனி இதை உறுதிப்படுத்தி உள்ளார். அவர் மிகத் தெளிவாக 'சபா' என்று அழைக்கப்படும் "நல்ல திராட்சரசம்" புளிக்க வைக்க படாது என்று கூறுகிறார். 'சபா'என்பது திராட்சைப்பழ சாற்றை, அதின் இனிப்பு சுவை அதிகரிக்கும்படி மூன்றில் ஒரு பங்காக குறையும் வரை கொதிக்க வைத்த ரசமாகும்.  (IV, 13) இன்னொரு இடத்தில் அவர் எழுதுவதாவது "திராட்சை ரசத்தின் வீரியத்தை வடிகட்டி அகற்றி விட்டால் அது மிகவும் நன்மை கொடுக்கக் கூடியதாய் இருக்கும்" (பிளினி இயற்கை சரித்திரம்,XIV,23-24) பிளினி புளுடார்க்,ஹோரேஸ் ஆகியோர் நேர்த்தியான ரசம் 'தீங்கற்ற, கலங்கமில்லாத'வகையைச் சேர்ந்தது என்று குறிப்பிடுகிறார்கள்.  2) சில ரபீக்கள் கொதிக்க வைத்த திராட்சை...

திராட்சை ரசம்

 அவர்களுக்கு திராட்சை ரசம் இல்லை. (யோவான் 2:3) இந்த விளக்கம் தரும் வேதாகமம் கூறுவதற்கு மாறாக சிலர், திருமண வீட்டில் கொடுக்கப்பட்ட திராட்சரசமும், இயேசு கிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட திராட்சரசமும், அதிக அளவில் அருந்தப்படும் போதை தரும் மதுபானமே என்கின்றனர்.  இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளப்படுமானால் பின்வரும் காரியங்களை ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வரும்.  1) திருமண வீட்டிற்கு வந்த விருந்தினர் குடித்து வெறித்திருக்க வேண்டும். 2) இயேசு கிறிஸ்துவின் தாயாகிய மரியாள், மதுபானம் குறைந்துவிட்டதென்று வருந்தி, ஏற்கனவே குடித்து வெறித்த களியாட்டக்காரருக்கு இந்த மது பானம் தருமாறு கேட்டிருக்க வேண்டும்.  3) இயேசு கிறிஸ்துவும் தன் தாயின் விருப்பத்துக்கு இணங்கி 120 முதல் 180 காலன்கள் வரை தேவைக்கு அதிகமான மதுபானத்தை உண்டாக்கி (யோவா 2:6-9) எல்லா விருந்தினரையும் குடித்து வெறிக்கச் செய்திருக்க வேண்டும்.  4) அவர் "தான் மகிமையை வெளிப்படுத்தும் படி" யாக செய்த முதல் "அற்புதத்தில்" போதை கொடுக்கும் திராட்ச ரசத்தைக் கொடுத்து (யோவான் 2:11), பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவனின் குமாரன் என்று மனிதர்கள்...

உன் இருதயம்

  உன் இருதயம் செம்மையாய் இருக்கவில்லை. (அப் 8:21) இயேசு கிறிஸ்துவுக்குத் தங்களை அர்ப்பணித்த சீஷர்களுக்கு மட்டும் தான் பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் கிடைத்தது என்பது அப்போஸ்தலர் நடபடி புத்தகம் முழுவதும் காணப்படும் உண்மையாகும். 1 ) சீமோன் ஆவியின் வரத்தையும், வல்லமையையும் பெற விரும்பினான். மற்றவர்கள் மேல் தன் கைகளை வைத்த உடன் ஆவியானவரின் வரம் கிடைக்க வேண்டும் என்னும் அதிகாரத்தைப் பெற நினைத்தான்.(அப் 8:19) இவனுடைய வேண்டுதலை ஆண்டவர் நிராகரித்தார். ஏனெனில் அவனுடைய இருதயம் ஆண்டவரிடத்தில் சரியாயிருக்கவில்லை. அவன் இன்னும் அக்கிரமக்காரனாகவே இருந்தான். அவன் பாவ அடிமைத்தனத்துக்குள்ளும் இருந்தான் (அப் 8:22,23) "தேவனுக்குப் பயப்பட்டு, நீதியானவற்றை செய்கிறவர்களுக்கே"உண்மையான பரிசுத்த ஆவியின் வரம் ஊற்றப்படும்.  (அப் 10:35;10:44-48; 5:32ஐ கவனிக்கவும்) அ) இன்றைய திருச்சபைகளில் இயேசு கிறிஸ்துவுக்கு தங்களுடைய வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்காதவர்கள், பரிசுத்த ஆவியில் நிறைந்து அந்நிய பாஷையில் பேசுவது, தீர்க்கதரிசனம் சொல்லுவது எல்லாமே சாத்தானின் அடையாளமே.  ஆ) உண்மையற்ற மனிதனுக்குள் பரிசுத்த ஆவிய...

தெரிந்து கொள்ள பட்டவர்களையும்

  தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் மாற்கு 13:22 ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். இன்றைய  விசுவாசிகள் தங்கள் திருச்சபைகளிலும் கர்த்தருடைய வார்த்தையைப் போதிக்கும் போதகர்கள் இயேசுவின் நாளில் இருந்தவர்களைப் போலக் கெட்டவர்களாகவும், மாய்மால வாழ்க்கை வாழ்கிறவர்களாகவும் இருப்பார்கள் என்பதை உணர வேண்டும்.  (மத் 24:11;24) இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் ஒவ்வொருவரும் உண்மையான விசுவாசிகள் அல்ல. அதேபோல் கிறிஸ்தவ எழுத்தாளர்களோ, நற்செய்தி பணியாளர்களோ, போதர்களோ, சுவிசேஷர்களோ, ஆசிரியர்களோ, மூப்பர்களோ, ஊழியர்களோ, தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டுவதால் அப்படி உண்மையான கிறிஸ்தவர்களாக ஆகிவிட மாட்டார்கள் என்று இயேசு எச்சரிக்கிறார்.  1) இந்த ஊழியர்கள் வெளி வேஷத்தில்,"நீதிமான்கள் போல தோற்றமளிப்பார்கள்."(மத் 23:28). அவர்கள் "ஆட்டுத் தோல்களைப் பொர்த்திக் கொண்டு"வருவார்கள்.  (மத் 7:15). அவர்கள் தங்கள் செய்தியை தேவனுடைய வார்த்தையை அடிப்படையாகக் கொண்டி...

விசுவாசத்தினால் கூடாத

  விசுவாசத்தினால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.  (மத் 17:20) இயேசு கிறிஸ்து அடிக்கடி உண்மையான விசுவாசத்தின் தன்மையைப் பாராட்டிப் பேசுகிறார். மலைகளைப் பெயர்க்கத்தக்க விசுவாசம் பற்றியும், அற்புதங்களைச் செய்யவும், நோய்களைக் குணமாக்கவும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்காகப் பெரிய காரியங்களைச் செய்யவும் கூடிய உண்மையான விசுவாசத்தைப் பற்றியும் இயேசு கிறிஸ்து எடுத்துக் கூறினார்.  *இங்கே இயேசு கிறிஸ்து கூறும் விசுவாசம் தான் என்ன ?* 1) உண்மையான விசுவாசம் என்பது.  பலன்களைத் தரக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த விசுவாசம் அது மலைகளை பெயர்க்கத்தக்க விசுவாசம். 2) விசுவாசம் என்பது. ஒரு ஆற்றல் அல்லது சக்தி என்று மட்டும் நம்புவது உண்மையான விசுவாசம் அல்ல. ஆனால் தேவன் மீது கொள்ளும் விசுவாசமாகும்.  (மாற் 11:22) 3) உண்மையான விசுவாசம் என்பது கிறிஸ்தவர்களின் இருதயங்களில் தேவன் செய்யும் ஒரு கிரியை ஆகும். (மாற் 9:24; பிலி 2:13) நம்முடைய ஜெபங்களுக்கு தேவன் பதிலளிப்பார் என்று தேவனால் நமது இருதயங்களில் தரப்படும் ஒரு விழிப்புணர்வு உண்மையான விசுவாசத்தில் அடங்குகிறது.  (மாற் 11:23) இது பரிசுத்த ஆவியினா...

விசுவாசமுள்ளவர்களாய்

  விசுவாசமுள்ளவர்களாய்... அவரை ஏற்றுக்கொண்டவர்கள்.(யோவா 1:12) இந்த வசனம், எப்படி இரட்சிப்புக்கேதுவான விசுவாசம், ஒரு தனிப்பட்ட சம்பவத்தில் நடக்கும் கிரியையும், ஒரு வாழ்வு நாளில் சம்பவிக்கும் மேம்பட்ட மனப்பான்மையும் இருக்கிறது என்று தெளிவாக காண்பிக்கிறது.  1) தேவனுடைய பிள்ளையாக மாற வேண்டுமானால் ஒருவர் கிறிஸ்துவை.    "ஏற்றுக்கொள்ள"                (கிரே எலபான், லம்பேனாவிலிருந்து) வேண்டும். இங்குள்ள இறந்த காலம் ஒரு திட்டவட்டமான விசுவாசக் கிரியையைக் குறிக்கிறது. 2) விசுவாசக் கிரியை பின் தொடர்ந்து, தொடர்ச்சியாக விசுவாசித்துக் கொண்டிருக்கும் கிரியை நடக்க வேண்டும். "விசுவாசித்தல்" என்ற வினைச்சொல் (கிரே, பிஸ்டோசின், பிஸ்டோவிலிருந்து ) அதாவது விசுவாசத்தலில் விடாமுயற்சி தேவை என்பதைக் குறிக்கிறது நிகழ்கால வினையெச்சமாக உள்ளது. "விசுவாசித்துக் கொண்டிருத்தல்" ஒருவர் முடிவில் இரட்சிக்கப்பட வேண்டுமானால், கிரியைக்குப் பின்பு உண்மையான விசுவாசம் தொடர்ந்து செயல்பட வேண்டும். (மத்10:22;24:12-13; கொலே1:21-23;எபி 3:6,12-15) @ ) தேவனுடைய பிள்ளைகள் ம...

சத்துருவை தோற்க்கடிக்கும்

  சத்துருவை தோற்கடிக்கும் பரிசுத்தம் உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து உப்பு பெறப்படுகிறது. கடல் நீரை கால்வாய் வழியாக பாயச் செய்து பின்னர் அதை சூரிய ஒளியில் காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். பின்னர் நீரின் மேலே உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இதை உப்பளங்கள் என்று அழைப்பார்கள். கடல் போன்று பாவமும் அதை செய்பவர்களும் பெருகியிருந்தாலும் நீங்களும் நானும், *அந்தகாரத்தினின்று தம்முடைய ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் (பேதுரு 2:9). அந்த பாதிகளில் வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரைப் போன்று இருகின்றீர்கள். இவ்வாறு வேறுபடுத்தப்பட்ட தண்ணீர் சூரிய ஒளியில் காயும் பொழுதுதான் உப்பு வெளிப்படுகிறது. அது போல நம்முள் மறைந்திருக்கும் பரிசுத்தத்தை வெளிப்படுத்தவே நமக்கு உபத்திரவங்கள் மற்றும் சோதனைகள் வருகின்றன. இந்த வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரோடு ஒருகாலும் பழைய கடல் தண்ணீரை சேர்க்க மாட்டார்கள். ஏனெனில் அந்த பழைய கடல்...

சீஷனாயிருப்பதற்குரிய நிபந்தனை.

  சீஷனாயிருப்பதற்குரிய நிபந்தனை. (லூக் 14:28-33) தம்மைப் பின்பற்றவும் தம் சீஷனாய் ஆகவும் விரும்புகிறவன் எந்த தியாகத்தையும் செய்ய ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து போதித்தார்.  சீஷனாக விரும்புகிறவன் இவ்வுலகில் தனக்கு உண்டான உறவுகள், சொத்துக்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். அதாவது, தன் சொந்த பந்தங்கள், குடும்ப உறவுகள் இவ்வுலகில் தமக்குள்ள பொருட்கள், தமது வாழ்க்கை, ஆசைகள், திட்டங்கள், விருப்பங்கள் அனைத்தையும் துறந்து விட வேண்டும்.  (லூக்கா 14:33 ஐ வாசிக்க) அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். இதன் பொருள் நாம் இவற்றையெல்லாம் முற்றிலுமாக இழந்து விட வேண்டும் என்பதல்ல, இவற்றைக் இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைத்து, அவருடைய ஊழியத்துக்கும், வழிகாட்டுதலுக்கும் காத்திருக்க வேண்டும்.  (லூக் 13:24; மத் 7:14; யோவான் 16:33; 2தீமோ 3:12) சீஷனாயிருக்க விரும்புகிறவர்கள் இந்த நிபந்தனையை பின்பற்ற வேண்டும்.  முயற்சி செய்வோம் கர்த்தர் பெரிய காரியங்களை செய்வாராக ஆமென்.  இன்றைய உயர்ந்த முத்துக்கள்...

பழைய ஏற்பாடு 6

 222 ஆவது தொடர்ச்சி  பழைய ஏற்பாட்டு  தீர்க்கதரிசிகளை பற்றிய ஓர் கண்ணோட்டம். *பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் செய்தி.* தீர்க்கதரிசிகளின் செய்திகள் மூன்று முக்கிய கருத்துகளின் அடிப்படையிலானவை.  1) தேவனுடைய பண்பு (நிலை)  (அ) தேவன் சிருஷ்டி கர்த்தர் என்றும், உலகின் சர்வ அதிகாரமுள்ள ஆட்சியாளர் என்றும் வெளிப்படுத்தி, அதனைச் சாதித்தனர். (உதாரணமாக, ஏசா 40:28) அவர் சரித்திரத்தின் தேவன் என்றும், தனது நித்திய நோக்கமான இரட்சிப்பு, நியாயத் தீர்ப்பு, இவை நிறைவேற சரித்திர சம்பவங்களை அமைக்கிறார் என்றனர். (ஏசா 44:28; 45:1;ஆமோ 5:27;ஆப 1:6) (ஆ) தேவன் பரிசுத்தம், நீதி, நியாயம் நிறைந்தவரென்றும் பாவம், அநீதி, அநியாயம் இவற்றை வெறுத்தார் என்றும் போதித்தனர். அவரது பரிசுத்தம் கிருபையுடன் இணைந்ததால் அவரது கோபம், நியாய தீர்ப்பு இவற்றைச் செயல்படுத்த தாமதமாகவும், மெதுவாகவும் இருக்கின்றார். அவர் பரிசுத்தராயிருப்பதால் அவரது மக்கள் தங்களை கர்த்தருக்குப் பரிசுத்தம் என அர்ப்பணம் செய்து கொள்ள விரும்புகிறார். (சகரி 14:20;ஏசா 29:22-24;எரே 2:3) உடன்படிக்கையின் தேவன் இஸ்ரவேலருடன் ஒரு தனித்தன்மை வாய...

பழைய ஏற்பாடு 5

 221 ஆவது தொடர்ச்சி  பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை பற்றிய ஒர் கண்ணோட்டம். *தீர்க்கதரிசியும், ஆசாரியனும்.* இஸ்ரவேலரின் சரித்திரத்தில் பலவேளைகளில் தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் தங்களுக்குள் மோதிக்கொண்டனர். இவர்கள் இருவரும் ஒன்றாகச் செயல் புரிய வேண்டும் என தேவன் விரும்பிய போதும், தேவ மக்களின் ஊழல் நிறைந்த வாழ்வை எதிர்க்காமல் கண்டும் காணாதவர்களாய் ஆசாரியர்கள் வாழ்ந்தனர்.  1) பாரம்பரியங்களில் ஊறியிருந்த ஆசாரியர்கள் சடங்குகள், எழுதப்பட்ட திட்டங்கள் இவற்றின் மூலமில்லாமல் தேவனை ஆராதிக்க இயலாதிருந்தனர். அவர்களது இறையியலில் ஒழுக்கத்துக்கு இடமிருப்பினும் அது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2) ஆனால் தீர்க்கதரிசியோ வாழ்வு முறை, ஒழுக்கம், நெறிமுறை, இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தான். மதசடங்குகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தவர்களை அவன் எதிர்த்தான். (இன்றும் உதாரணமாக சபையில் சூரிய வழிபாட்டுக்குரிய பொங்கல் வாழ்த்துகளை அநேகர் எதிர்பதில்லை அப்படி செய்கிறவர்களை அழைத்து வந்து எழுப்புதல் கூட்டம் நடத்துகிறார்கள் சிந்தித்துப் பாருங்கள் நீங்கள் உண்மையில் ஊழியர்களா? ) அவன் தனது...

பழைய ஏற்பாடு 4

 220 ஆவது தொடர்ச்சி  பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை பற்றிய ஒர் கண்ணோட்டம். 5) பாவம், தீமை இவைகளை குறித்த மேலான உணர்வு தீர்க்கதரிசிகளுக்கு உண்டாயிருந்தது. (எரே 2:12-13,19; 25:3-7;ஆமோ 8:4-7;மீகா 3:8) கடின குணம், தீய செயல்கள், ஒழுக்கக்கேடு, அநீதி இவைகளைக் கண்டால் அவர்கள் கொதித்தெழுந்தனர். தேவ கட்டளையினின்று சிறிதளவு அகல்வது போல மக்களுக்குத் தெரிகின்ற காரியங்கள் தீர்க்கதரிசியின் பார்வையில் பெரிய அழிவாகத் தெரிந்தது. கண்டுகொள்ளாமல், ஒத்துப் போதல், நடிப்பு, சாக்குபோக்கு, இவைகளை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை,  (ஏசா 32:11; எரே 6:20; 7:8-15,21-23; ஆமோ 4:1;6:1) தேவனுக்கு நீதியின் மேல் உள்ள பிரியத்தையும், மீறுதலின் மீதுள்ள வெறுப்பையும் குறித்து வேறு யாரையும் விட தெளிவாக தீர்க்கதரிசி போதித்தான்.  (எபி 1:9) 6) தேவனுடைய மக்களின் ஆழமற்ற மேலோட்டமான பரிசுத்த வாழ்வை எதிர்த்துப் பேசியதுடன், நியாயபிரமாணத்தின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் மனப்பூர்வமாய் கீழ்படியும்படிக்கு ஜனங்களை தீர்க்கதரிசி ஊக்குவித்தான்.  அவன் தன்னை முழுவதும் கர்த்தருக்கு அர்ப்பணித்ததுடன் அரைகுறை ஒப்புக்கொடுத...

பழைய ஏற்பாடு 3

 219 ஆவது தொடர்ச்சி  பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை பற்றிய ஒர் கண்ணோட்டம். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் எட்டு வித குணாதிசயங்கள்.  பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி எப்படிப்பட்டவன்? 1) தேவனோடு நெருங்கிய தொடர்பு கொள்பவனாகவும், தேவனுடைய நம்பிக்கைக்கு உரியவனாகவும் செயல்பட்டான்.  (ஆமோஸ் 3:7) மனித நோக்கத்தின் படி அல்லாமல் தேவனுடைய பார்வையின் மூலமாக உலகையும், உடன்படிக்கையின் மக்களையும் தீர்க்கதரிசி நோக்கினான்.  2) தீர்க்கதரிசி தேவனுக்கு நெருக்கமாக இருந்ததால் மனிதனுடைய பாவத்தை கண்டு தேவன் துன்புறும்போது அவனும் இணைந்து தேவனிடம் பரிதாபம் கொண்டான். மற்ற யாரையும் விட தேவனுடைய நோக்கம், சித்தம், விருப்பம் இவற்றை அறிந்திருந்ததால் தானும் தேவனைப் போன்ற உணர்ச்சி வெளிப்பாடுகளை கொண்டிருந்தான். மற்றொரு விதமாக கூறின், தீர்க்கதரிசி தேவனுடைய சத்தத்தை மட்டும் கேட்காமல், அவரது இருதயத்தையும் உணர்ந்திருந்தான். (எரே 6:11; 15:16-17; 20:9) 3) தேவனைப் போலவே தேவ ஜனங்களை தீர்க்கதரிசி நேசித்தான். மக்கள் மனவேதனைப்பட்டபோது தீர்க்கதரிசியும் ஆழமான வேதனை அனுபவித்தான். (புலம்பலை பார்க்கவும்) தேவனிடத்தில்...

பழைய ஏற்பாடு 2

 218 வதின் தொடர்ச்சி.  பழைய ஏற்பாட்டை தீர்க்கதரிசிகளை பற்றி ஒர் கண்ணோட்டம். ஆவிக்குரிய மனிதனும், தேவனுடைய வார்த்தையும்.  எபிரேய சரித்திரத்தில் தீர்க்கதரிசி என்பவன் மற்றொரு மதத் தலைவன் அல்ல; மாறாக தேவனுடைய ஆவியாலும் அவரது வார்த்தையாலும் மேற்கொள்ளப்பட்டவனாவான். (எசே 37:1,4) அவனுக்குள் ஆவியும் வார்த்தையும் இருந்ததால் கீழ்கண்ட மூன்று குணாதிசயங்களையும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி வெளிப்படுத்துகிறான்.  1) வெளிப்படுத்தப்பட்ட தெய்வீக அறிவு.  மக்கள், சம்பவங்கள், வீட்டின் உண்மை இவற்றைக் குறித்த தெய்வீக வெளிப்படுத்தல்களை அவன் உணர்ந்தான். இந்த அறிவின் முக்கிய நோக்கமே தேவனுடைய பிள்ளைகளை தேவனுக்கும், அவரது உடன்படிக்கைக்கும் உண்மை உள்ளவர்களாய் வாழும்படி உற்சாகப்படுத்துவதாகும்.  போதனை, கண்டிப்பு, எச்சரிப்பு, போன்றவை மூலமாக தேவனுடைய பிள்ளைகளுக்கு அவரது சித்தத்தை வெளிப்படுத்துவதே பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தின் சிறப்பு அம்சமாகும்.  தனது நியாய தீர்ப்பு நிகழும் முன்பே மக்களுக்கு அறிவிக்க தீர்க்கதரிசிகளை தேவன் உபயோகித்தார்.  இஸ்ரவேல், யூதா ஆகியவற்றின் இருண்ட சரித்தி...

பழைய ஏற்பாடு

 218 உயர்ந்த முத்துக்கள்  பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை பற்றி ஒரு கண்ணோட்டம்.  (ஏசாயா 6:8,9) "பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்". எபிரேய சரித்திரத்தில் தீர்க்கதரிசியின் நிலை 1)அக்காலத்தில் இருந்த மக்களிடையே ஆவிக்குரிய நிலையில் உயர்ந்து நின்ற ஆண்களும், பெண்களுமே பழைய ஏற்பாட்டின் காலத்தில் தீர்க்கதரிசிகளாக இருந்தனர். தீர்க்கதரிசிகளைப் படம் பிடித்துக் காட்டுவது போல வேறெந்த வித மக்களையும்  இலக்கியங்கள் விளக்குவதில்லை. இஸ்ரவேலரின் சரித்திரத்தில் ஆசாரியர்கள், நியாயாதிபதிகள், ராஜாக்கள், ஞானமுள்ள ஆலோசகர்கள், சங்கீதக்காரர்கள், ஆகியவர்களுக்கு தனிப்பட்ட இடங்கள் கொடுக்கப்பட்டிருப்பினும், அவர்கள் யாரும் தீர்க்கதரிசிகளை போல் மக்களிடம் உயர்ந்த நிலையுடன் பிற்கால மீட்பின் சரித்திரத்தில் செல்வாக்கு பெறும் அளவுக்கு உயர்ந்து...

உண்மையான ஊழியக்காரன்

  எப்பாப்பிரா—'கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரன்' கொரிந்துவிலும், எபேசுவிலும், பிலிப்பியிலும் கிறிஸ்தவ சபைகளை ஸ்தாபித்தவர் யார்? 'புறஜாதிகளுக்கு அப்போஸ்தலராயிருந்த பால்' என்று பதில் சொல்வதில் நீங்கள் ஒருவேளை தயங்கியிருக்க மாட்டீர்கள்.  ( ரோமர் 11:13 )  நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம். எனினும், கொலோசெயிலும், ஈரப்போலியிலும், லவோதிக்கேயாவிலும் சபைகளை ஸ்தாபித்தவர் யார்? நாம் நிச்சயமாக சொல்ல முடியாதென்றாலும், எப்பாப்பிரா என்ற பெயர்கொண்ட ஒருவர் அதைச் செய்திருக்கலாம். எவ்வாறாயினும், 'கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரன்' என்று இந்த சுவிசேஷகர் அழைக்கப்பட்டிருப்பதால், இவரைப்பற்றி இன்னும் அதிகம் அறிந்துகொள்ளுங்கள் நீங்கள் ஒருவேளை விரும்புவீர்கள்.—+கொலோசெயர் 1:7. ) லியூக்கஸ் நதிப்படுகையின் சுவிசேஷகர் எப்பாப்பிரா என்ற பெயர், எப்பாப்பிரோதீத் என்பதன் சுருக்கமாக உள்ளது. ஆனால், பிலிப்பியிலிருந்து எப்பாப்பிரோதீத்துடன் இந்த எப்பாப்பிராவைக் குழப்பிவிடக்கூடாது. ஆசியா முனையின், லியூக்கஸ் நதிப்படுகையில் கிறிஸ்தவ சபைகள் இருந்த மூன்று இடங்களில் ஒன்றாகிய கொலோசெயிலிருந்து இந்த எப்ப...

பிலேயாம் 2

 பிலேயாம் என்பது பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு தீர்க்கதரிசி. மற்றும் குறி சொல்லுகிறவன். இவன் யூப்ரடீஸ் நதிக்கரையில் பெத்தோர் என்ற இடத்தில் வாழ்ந்த பெயோரின் மகன். மோவாபியர்கள் மற்றும் மீதியானியர்கள் இவனை சூதாட்டக்காரர் மற்றும் தீர்க்கதரிசி என கருதினர்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து அநேக   தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தார்கள். அதில்  பிலேயாம் என்ற தீர்க்கதரிசியும் ஒருவன். (எண் 24:17 ). பாலாக் எனக்கு வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும் சிறிய காரியம் ஆனாலும் பெரிய காரியம் ஆனாலும் செய்யும் பொருட்டு என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது என்று சொல்லி தேவனுக்குள்ளாக மிக வைராக்கியமாக இருந்தான்.  (எண் 22:18) நீதிமானை போல மரிக்க வேண்டும் என்றும் அவர்களின் முடிவை போல் அவனுடைய முடிவும் இருக்க வேண்டும் என்றும் வாயினால் அறிக்கை செய்தான்.  (எண் 23:10). அதுதான் அவனுடைய ஆசையாகவும் இருந்தது. கடைசியில் பட்டையத்தினால் கொலை செய்யப்பட்டான். இஸ்ரவேல் ஜனங்கள் அவனைக் கொலை செய்தார்கள். துன்மார்க்கனை போல் மரித்தான். (எண் 31:8) ஒரு தீர்க்க...

காணிக்கை வாங்காமல்

 அவருடைய நாமத்தின் நிமித்தம் புறஜாதியாரிடத்தில் காணிக்கை வாங்காமல் (3 யோவான் 7) பட்டணங்கள் தோறும் பிரயாணஞ்செய்து கிறிஸ்துவின் சுவிசேஷத்தினை அறிவித்து வந்த ஊழியர்களை குறித்து கூறப்பட்டுள்ளது.  சுவிசேஷ பணிக்கும் அதன் தேவைகளுக்கும் தங்களை அர்ப்பணிப்பது, தேவனுடைய பிள்ளைகளுக்கு கிடைக்கும் சிலாக்கியமும், கணமும் ஆகும்.  1) சுவிசேஷகர்களை அங்கீகரித்தல், அவர்களைத் தாங்குதல், மற்றும் அவர்களைப் பணிக்கு அனுப்புதல் ஆகியவைகள் தேவன் அங்கீகரிக்கும் வகையில் செயல்படுதல் வேண்டும். (3யோவா 5,6; 1கொரி 9:14;பிலி 4:10-18). சுவிசேஷர்களைப் பிச்சை கேட்பவர்களைப் போல கருதாமல், அவர்களை தேவனை ஏற்றுக் கொள்வது போல ஏற்றுக்கொண்டு (மத் 10:40) உலகத்திற்கு சுவிசேஷத்தை பிரஸ்தாபிக்கும் கிறிஸ்து இயேசுவினுடைய சேவகர்களாக என்ன வேண்டும்.(மத் 28:19) 2) ஆதிசபையில், சுவிசேஷர்களை ஊழியத்திற்கு அனுப்பும்போது அவர்களுக்கு தேவையான உணவு, பிரையான செலவுகள் மற்றும் சகல இதர தேவைகளுக்கான பணத்தினையும் கொடுத்து அனுப்புவார்கள். அது அவர்களுக்கு போதுமானபடி இருந்தது. (கலா 6:6-10;பிலி 4:16) ஆகிய வசனங்களை பார்க்கவும். விதமாக சுவிசேஷர்களோடு...

இருக்கிறவராகவே இருக்கிறேன்

 இருக்கிறவராக இருக்கிறேன்.(யாத் 3:14) தேவனுடைய நாமத்தின் முக்கியத்துவம் *"இருக்கிறவராகவே இருக்கிறேன்".* என்பதாகும் தேவனுடைய சமூகம் மக்களிடத்தில் எப்போதும் இருக்கிறது என்று காட்டுகிறது.  தேவன் தமது நாமத்தை, *"இருக்கிறவராக இருக்கிறேன்"* என்று மோசேக்குத் தெரிவித்தார். (இதிலிருந்து தான் எபிரேய மொழியில் 'யாவே 'என்னும் பெயர் உண்டாயிற்று). மற்றும் அது செயலைக் குறிப்பிடும் ஒரு எபிரேயச் சொற்றொடர். மோசேயிடம் தேவன், * "எங்கும் பிரசன்னமாயிருந்து செயல்படும் தேவன் என்று நான் அறியப்பட விரும்புகிறேன் "என்றார்.* 1) 'யாவே ' என்னும் நாமத்தில் உள்ளடங்கியிருக்கும் வாக்குறுதி, உயிருள்ள தேவனின் பிரசன்னம் தமது மக்களோடு ஒவ்வொரு நாளும் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.  (யாத் 3:12,ஆதி 2:4 ல்) தேவனுக்கு இன்னொரு பெயர் அறிமுகப்படுத்தப்படுகிறது. *'கர்த்தர்'எபிரேய மொழியில்  'யாவே' அதே நேரத்தில் "ஏலோகீம்"என்பது தேவனுடைய பொதுப்பெயர் ஆகும்.* அது தமது மக்களிடம் அவருக்குள்ள அன்பையும், அவர்கள் மீது அவருக்குள்ள அக்கறையையும், அவர்களை மீட்டுக் கொள்ள வேண்ட...

நமக்கு அடுத்து யார் ?

 நமக்கு அடுத்து யார் ? இந்த பூமியில் அநேகர் தேவனுக்காக ஊழியம் செய்கிறார்கள்.  கர்த்தருக்கு மகிமை உண்டாக்கட்டும்.  தேவனுக்காக மிகப்பெரிய அளவில் ஊழியம் செய்யக்கூடிய ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பலவிதமான ஊழியங்களை செய்கிறார்கள். மீடியா ஊழியம்,எழுத்து ஊழியம், போதக ஊழியம், டீச்சிங் ஊழியம், சமூக சேவை ஊழியங்கள், இப்படி பலவிதமான ஊழியங்களை மிக உற்சாகமாக செய்து வருகிறார்கள்.  ஆனால் இவர்கள் இன்னொரு காரியத்தை சிந்திப்பதில்லை  இவர்களுக்குப் பிறகு அதாவது தனக்குப் பிறகு இந்த ஊழியத்தை யார் செய்வார்கள் என்பதை முடிவு செய்யாமல் மரித்து போனவர்கள் அநேகர் ... சிலர் தனது வாரிசுகளை ஏற்படுத்துகிறார்கள். ஒரு  வெளித்தோற்றத்திற்காக பல கோடி சொத்துக்களை காப்பதற்காக சிலர் க்ரிட்டிகளாக தன்னுடைய சபையில் உள்ளவர்களை ஏற்படுத்தி வைக்கிறார்கள். வேதத்தில் இஸ்ரவேல் மக்களுக்கு ஊழியம் செய்த மோசே  இவனுக்கு அடுத்து யார் வர வேண்டும் என்பதை தேவன் அருமையாக மோசேக்கு எடுத்து விளக்கினார். மோசேக்கு அடுத்து வரப்போகிற தலைவனுக்கு மோசே என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தார்.  மோசே தேவ ...