Posts

Showing posts from August, 2025

தகாத உடல் உறவு

தகாத உடலுறவு, மாடு, குதிரைய செக்ஸ் பண்றது, ரேப் பண்றது, சின்னப் பிள்ளைகள பலாத்காரம் பண்றது - இதை தவிர இந்துமதத்துல என்ன கலைய வளர்க்க போறாங்க ? இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....? 1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு) குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை மகாபாரதம் படித்தவர்களுக்கு நல்லாவே தெரியும். 2. பத்மை - (தகப்பன் மகள் உறவு) சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள். பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கி...

இளமை

*இளமை தவறான பலவற்றை நம்புகிறது. முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது.* *ஒருமுறை நாம் ஒருவரை இழந்தால், அதே நபர் அதே போல் மீண்டும் நம்மிடம் திரும்பி வருவதில்லை. அந்த இழப்பு அவர்களுடைய மோசமான அல்லது சிறந்த பதிப்பாக இருக்கலாம்.* *யாரை பாவம் என்று நினைத்தோமோ அவர்கள் தான் நமக்கு நல்ல பாடங்களை கற்றுத் தந்து விடுகின்றனர்.* *வாழ்க்கையில் சிலரை விலக்கி வைப்பதும் சிலரிடமிருந்து விலகி இருப்பதும் நல்லது. அவ்வாறு செய்வது நம் சுயநலத்துக்காக அல்ல,நம் தன்மானத்திற்காக.* *படிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் புத்தகமும் ரசிக்கத் தெரியாதவர் கையில் இருக்கும் வாழ்க்கையும் வீணாகி தான் விடுகிறது.* *மனிதனாய் பிறந்து மனிதநேயம் இல்லாமல் வாழ்ந்து மடிந்து என்ன பயன். மனிதனாய் பிறந்தோம், மனிதனை மனிதத்துடன் மதித்து மனிதனாய் நடப்போம்.* *உங்களைப் பற்றிய பிறரது கருத்து அவர்களின் எண்ணம். உங்களுடைய பிரச்சனை அல்ல. இதயம் தூய்மையாகவும் எளிமையாகவும் இருக்கின்ற வரை, சரியான பதிலையே எப்போதும் அளிக்கும்.* *யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்காமல், இயல்பான முறையில் வாழ்க்கையை வெளிப்படுத்தவும். உடலும் உயிரும் சொந்தமில்லை.* *உற்றார் உற...

எது இல்லாமல் போனாலும்

எது இல்லாமற் போனாலும்* 'அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்'. - (ஆபகூக் 3:17-18)   தீர்க்கதரிசியாகிய ஆபகூக் தேவனிடம் இப்படியாக முறையிடுகிறார், 'தேவனே பாவிகள், கொடுமையானவர்கள், இருதயத்தில் தீங்கை பிணைக்கிறவர்கள் இவர்களெல்லாரும் சகல வசதிகளுடன் செல்வ செழிப்பாக வாழுகிறார்களே! உமக்கு பயந்து நடக்கும் நானோ இவ்வளவு கஷ்டப்படுகிறேனே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கி கூப்பிடுவேன், நீர் கேளாதவர் போல மௌனமாயிருக்கிறீரே' என்ற புலம்பினார். பின்பு தேவனது செயலையும், அவரது கிரியைகளையும் அறிந்தவுடன், எல்லாவற்றையும் விட தேவ உறவினால், வரும் சந்தோஷமே மேலானது என உணர்ந்து மிக அற்புதமாக தன் ஆத்துமாவை தேற்றி கொள்கிறார். அத்தி மரம் இருக்கிறது. ஆனால் துளிர்விடவில்லை, திராட்சை செடி வளர்ந்துள்ளது, ஆனால், பழம் உண்டாகவில்லை, ஒலிவ மர...

நாம் கட்டும் வீடு

நாம் கட்டும் வீடு போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியிலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும். - (1கொரிந்தியர் 3:11-15).   ஒரு வீடு கட்டிக் கொடுக்கும் மேஸ்திரி வயதாகிப்போனதினால் தன்வேலையிலிருந்து ஓய்வெடுக்க விரும்பினார். அதை தன் எஜமானிடம் சொன்னபோது, அவர், தனக்கு கடைசியாக ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும், அதை ஒரு அருமையான நண்பருக்கு கொடுக்க வேண்டும் என்றும், அதை நல்லபடியாக கட்டிக் கொடுத்து விட்டு, நீங்கள் ஓய்வெடுக்கலாம் என்றும் கூறினார். அதைக் கேட்ட மேஸ்திரிக்கு வருத்தமாக இருந்தத...

சுவிசேஷத்தில் அத்தியாவசியம்

*சுவிசேஷ செய்தியின் அத்தியாவசியங்கள் என்ன?* பதில் "சுவிசேஷம்" என்ற வார்த்தைக்கு "நற்செய்தி" என்று பொருள், அது இயேசு கிறிஸ்துவின் பிராயச்சித்தக் கிரியையின் மூலம் பாவ மன்னிப்புக்கான செய்தியாக சிறந்த முறையில் வரையறுக்கப்படுகிறது. இது ஒரு தேவனுடைய மீட்பின் திட்டமாகும், இது அவருடைய தெய்வீக குமாரனை நம்புவோருக்கு ஒரு நீதியுள்ள மற்றும் பரிசுத்தமான தேவனுடன் ஒப்புரவாக்குதல் ஆகும். இந்த இரட்சிக்கிற செய்தியின் அத்தியாவசிய உள்ளடக்கம் வேதாகமத்தில் நமக்கு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கொரிந்தியர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய முதல் கடிதத்தில், அவர் சுவிசேஷ செய்தியின் உள்ளடக்கத்தை விவரிக்கிறார், “அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள் நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால...

அந்நிய பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை கிறிஸ்தவர்களின் பண்டிகை அல்ல. லேவியராகமம் 23ல் ஏழு பண்டிகை குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் ஒன்றுதான் #முதற்பலனாகிய அறுப்பின் பண்டிகை. இவைகள் கிறிஸ்துவை பற்றியதான அர்த்தம் கொள்ளும். 📗கொலோசெயர் 2:17. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.       ஆக..#முதற்பலனின்_பண்டிகை #பொங்கல் என்பது #தவறான #கருத்தாகும், முதற்பலன் என்பது இயேசு கிறிஸ்து மரித்தோரில் இருந்து முதலாவதாக எழுந்தார் என்று 1 கொரிந்தியரில் வாசிக்கிறோம், அதுதான் "முதற்பலன்"என்ற அர்த்தமாகும். 🅿️தங்கள் விளைச்சலுக்கு காரணமாக சூரியனுக்கு நேராக தங்கள் விளைச்சலின் அரிசியை பானைகளில் இட்டு, பொங்கள் வைத்து சூரியனுக்கு நன்றி கூறுவதுதான் பொங்கல் பண்டிகையின் விஷேசம். "சூரிய வணக்கம் விக்கிர ஆராதனை", (எசேக்கியேல் 8:16) அதை நாம் செய்யலாமா?🤔 ரொம்ப எளிமையான எடுத்துக்காட்டு; பொங்கல் பண்டிகை யாரோட பண்டிகை என்று காலண்டரில் பாருங்கள், ஹிந்துக்கள் பண்டிகை லிஸ்டில் இருக்கும். பொங்கல் பண்டிகைக்கும், நமது பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள #அறுவடை #பண்டிகைக்கும் #எந்த_சம்மந்த...

கொண்டாடி முடிந்து போனது

கிறிஸ்மஸ் கொண்டாடி முடிந்து போனது.  அடுத்து புது வருடம்  புது காலண்டர். புதிய வாக்குத்தங்கள்.  ஆமாம் அதுவும் முடிந்தது. அடுத்து ஈஸ்டர்  அதுவும் கொண்டாடி முடிந்தது.  அடுத்து vps அதையும் ஒரு கை பார்த்தாச்சு  இதையே திரும்பத் திரும்ப நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது நான் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு என்ன பயன் என்பதை அநேகர் நினைவு கூறுவதில்லை, அதைப் பற்றிய தெளிவான சிந்தனையும் அநேக தேவ ஊழியர்களுக்கும் தேவனுடைய பிள்ளைகளுக்கும் அது விளங்காத புதிராக இருக்கிறது. இதுதான் பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தின் 40 ஆண்டுகளாக சுற்றி சுற்றி வந்த செயல்பாட்டில் ஆயிசு நாட்களை தொலைத்தார்கள்.  கிறிஸ்மஸ், புத்தாண்டு, ஈஸ்டர், வி பி ஸ் கொண்டாட்டம், ஆசன கொண்டாட்டம், ஆண்டு விழா கொண்டாட்டம், கடைசியில் கர்த்தரின் பெயரில் கன்றுக்குட்டி கொண்டாட்டம். வருடம் வருடம் நாம் இதையே சுற்றி வருகிறோம். முடிவில் சுதந்திர தேசத்தில் நுழையாமல் வழியிலே அழிந்து போனார்கள்.  நமக்கும் ஒரு பரம சீயோன் நமக்கும் பரம எருசலேம்  நமக்கும் ஒரு நித்திய ஜீவன்  அதை இழந்து விடாதீர்கள். ஆ...

அனைத்தும் இயேசுவுக்கே

அனைத்தும் கிறிஸ்துவுக்கே* '...மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்' - (வெளிப்படுத்தின விசேஷம் 2:10). பசிபிக் மகா சமுத்திரத்தில் மொலாக்காய் (Molokai Island) என்பது சிறு தீவு. தென் பசிபிக் தீவில் குஷ்டரோகம் எனப்படும் தொழுநோய் பரவிய நாட்கள். தொழு நோயால் தாக்கப்பட்டோர் மொலாக்காய் என்னும் இத்தீவில்தான் தனிமைப்படுத்தப்பட்ட கவனிப்பாரற்று தங்கள் வாழ்வை இழந்தனர். மக்களால் மட்டுமல்ல, கடவுளாலும் கைவிப்பட்டுவிட்டோம் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்களுக்கு உதவி செய்யவும், நோயின் கொடுமையிலிருந்து அவர்களை காப்பற்றவும் யாரும் முன்வரவில்லை. காரணம் அத்தீவிற்கு சென்றவர்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரக்கூடாது என்பது அரசாங்கத்தின் உத்தரவு. 1873-ம் ஆண்டு துன்பத்தில் துவண்ட அம்மக்களுக்கு துணைவனாக அம்மக்களை தேடி புறப்பட்டான் ஒரு இளைஞன். அவர்தான் டாமியன் (Damien) ஆவார். பலர் அவரை தடுத்தனர். ஆனால் டாமியனோ தன் தீர்மானத்தில் உறுதியாய் இருந்தார். மொலாக்காய் தீவில் இறங்கிய உடன் அங்கு அவர் கண்ட காட்சிகளோ, கொடுமையாய் இருந்தன. வியாதியின் கொடுமையால் நடை பிணங்களாக, உடலெல்லாம்...

காத்துக்கொள்

*காத்து கொள்* எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். - (நீதிமொழிகள் 4:23). கிராமம் ஒன்றில் பெரிய வேப்ப மரம் ஒன்று பல ஆண்டுகளாக செழித்து நின்றது. பலர் அதன் நிழலில் வந்து இளைப்பாறுவர். சிலர் இந்த மரத்தடியில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருப்பர். கயிற்று கட்டிலில் ஒன்றை போட்டு மரத்தின் நிழலில் தூங்குவோரும் உண்டு. பலத்த காற்று, பெருமழை கொடிய வெயில் இடி மின்னல் எதுவும் அம்மரத்தை அசைக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒரு நாள் பலத்த சத்தத்துடன் அம்மரம் முறிந்து விழுந்தது. நல்ல வேளை யாரும் அதனடியில் இல்லை. பலத்த சத்தம் கேட்டதும் ஊர் ஜனங்கள் ஓடி வந்து பார்த்தனர். பல ஆண்டுகள் நமக்கு நிழல் கொடுத்த அருமையான மரம் விழுந்து விட்டதே என கவலைப்பட்டனர். அருகில் சென்று பார்த்த போது மரத்தின் பட்டையில் வண்டுகள் துளையிட்டு உள்ளே சென்று மரத்தின் திசுக்களையெல்லாம் சாப்பிட்டு தீர்த்தன. நாளுக்கு நாள் உள்ளுக்குள் வலு இழந்த அந்தபெரிய வேப்ப மரம் முறிந்து விழுந்தது. அந்தோ பரிதாபம்! அந்த வேப்ப மரத்தின் வெளித்தோற்றத்தை பார்த்தால் அது உடைந்து விழுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்த...

ஆவிக்குரிய அடையாளங்கள்

ஆவிக்குரியவர்களின் அடையாளங்கள்*. அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். - (ரோமர் 8:5). பரிசுத்த ஆவியை பெற்று கொண்டதாக ஒருவர் நம்பினாலும் அவருடைய வாழ்க்கை பரிசுத்தமில்லாமலும், தெய்வீக குணங்களற்றதாகவும், தேவ சமாதானமற்றதாகவும் இருந்தால், அவரிடம் பரிசுத்த ஆவியானவர் இல்லை என்பதே பொருள். ஒருவர் தன்னிடம் பரிசுத்த ஆவி உண்டு, ஆனால் ஆவியின் கனிகள்தான் இல்லையென்றால் அவரிடம் பரிசுத்த ஆவி இல்லையென்பதே பொருள். ஏனென்றால் பரிசுத்த ஆவியினால் நடத்தப்படும் அனுபவம் இருந்தால் பரிசுத்த ஆவியினால் உருவாகும் நற்குணங்களாகிய கனிகள் நிச்சயமாக காணப்படும். ஆனால் இக்காலங்களில் அநேகர் பரிசுத்த ஆவியானவர் உடனிருப்பதை வேதம் கூறுகின்ற அடையாளங்களின் அடிப்படையில் பாராமல், தாங்கள் சிலநேரங்களில் உணரும் பரவச நிலை, மனக்களிப்பு, உற்சாகமான உணர்வு அவற்றின் அடிப்படையிலேயே பார்க்கிறார்கள். இவைகளையே பரிசுத்தஆவியை பெற்றிருப்பதற்கு அடையாளமாக எண்ணி விடுகின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியை பெற்று கொண்டதன் அடையாளம் பரிசுத்தம், நற்குணங்கள், ...

இயேசுவை கொன்றது யார்

இயேசுவை கொன்றது யார்?* வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், இயேசுவின் சிலுவை மரணத்திற்கான பொறுப்பு, யூத மத தலைவர்கள் மற்றும் எருசலேமில் இருந்த யூதர்கள் மேல் வைக்கப்படுகிறது. ஆனால் சமீப நாட்களாக இதைக் குறித்து, இயேசுவின் மரணத்திற்காக பொறுப்பை ரோமர்கள் மேலும், ரோம ஆளுநரான பொந்தியுபிலாத்துவின் மேலும் வேதஅறிஞர்கள் வைக்கிறார்கள். ஏனெனில் இயேசுவின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று அறிந்த போதும், அவரை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்ததினால், இயேசுவின் மரணத்தில் பிலாத்துவுக்கும் பொறுப்பு இருக்கிறது.  இயேசுவின் மரணத்துக்கு யூத தலைவர்களையும், மக்களையும் கூட பொறுப்பாக்க முடியும். ஏனெனில் (அப்போ 2:22-23; 4:10)ஆகிய வசனங்களில் அப்போஸ்தலன் பேதுரு தனது சொந்த யூத மக்கள், இயேசுவை சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்ததை குறிப்பிட்டு குற்றம் சாட்டுகிறார். (மத்தேயு 27:25ம்) வசனத்தில் “இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று” யூத மக்கள் சொன்னதாக வாசிக்கிறோம்.  தெய்வநிந்தனை பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒரு யூதனுக்கு மரண தண்டனை கொடுக்க யூதருக்க...

கவலைப்படாதீர்கள்

கவலைப்படாதீர்கள்*  ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? - (மத்தேயு 6:25). ஒரு கணவனும் மனைவியும் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்து பேசி கொண்டிருந்தார்கள். கணவர் 'ஐயோ இந்த காலத்தில் மற்ற பிள்ளைகள் படிக்கிறதையும் வாங்குகிற மார்க்குகளையும் பார்த்தால் நம்ம பிள்ளைகள் எங்கே போய் நிற்பார்களோ தெரியவில்லை! பிற்காலத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம் போலிருக்கிறது. ஒரு நல்ல வேலை கிடைக்காவிட்டால் இந்த பிள்ளைகள் என்ன செய்யும்?'என்று கவலைப்பட ஆரம்பித்தார். ஆனால் மனைவியோ, ' பாருங்கள் நம் பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்திருக்கிற அருமையான தாலந்துகளை! அவன் கிட்டாரை எடுத்து பாட ஆரம்பித்தால் எல்லாரும் நின்று கேட்டுவிட்டு தான் போவார்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? கர்த்தருடைய கரத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருப்பதால் அவர் பார்த்து கொள்வார்...

கரைய வேண்டிய பரிசுத்தம்

*கரைய வேண்டிய பரிசுத்தம்* உப்பு பல விதமான அளவுகளில் நமக்கு கிடைக்கும். கல் உப்பு பெரிதா இருக்கும், தூள் உப்பு போடி போல இருக்கும். உப்பை திரவ உணவு பொருட்களில் சேர்க்கும் பொழுது அது முற்றிலுமாக கரைந்து அந்த உணவுப் பொருளை மேன்மைப்படுத்தி சுவையுட்டுகின்றது. ஒருவேளை இந்த உப்பு கரைய மறுத்திருந்தால் அந்த உணவுப் பொருள் தனது நிறைவான சுவையை அடைந்திருக்காது. அதே போல நாமும் நமது உப்பாகிய பரிசுத்தத்தை, பிறரது வாழ்வில் கரையச்செய்து அவர்களுடைய வாழ்வை சுவையேற்ற கடமைப்பட்டிருகின்றோம். அருள்நாதர் இயேசு கிறிஸ்து சொல்கின்றார், *நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள் (மத்தேயு 5:13). நீங்கள் பூமியில் சுவையின்றி வாழும் மக்களின் வாழ்வில் கரைய வேண்டிய உப்பாக இருகின்றீர்கள். பரிசுத்த பவுல் இப்படியாய் கொரிந்து பட்டணத்து சபை விசுவாசிகளுக்கு எழுதுகின்றார், *பலவீனரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்* (1 கொரிந்தியர் 9:22). பவுல் எல்லோருடைய வாழ்விலும் உப்பை போல கரைந்து கிறிஸ்த்துவின் சுவையை வெளிப்படுத்தியவர். புலமை...

உங்களுக்கு குறித்திருக்கிறதை

உங்களுக்கு குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்* அவருடைய (கர்த்தருடைய) வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன். அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. யோபு 23:12-14. 1. கர்த்தருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்: சுவையான இனிப்பு ஆகாரங்களை மட்டுமே நாம் சாப்பிடுவோம் என்றால் நமது வயிற்றினுள் தேவை இல்லாத கிருமிகள் வளர்ந்துவிடும். அவ்வப்போது நாம் கசப்பான பாகற்காயை சாப்பிடுவோம். கசப்பான பாகற்காயை சாப்பிடும் எந்த மனிதனும், இந்த காய் தனது உடல்நலத்திற்கு நல்லது என்று சொல்லிக்கொண்டே சாப்பிடுவான். அதுபோலத்தான் யோபுவும், கர்த்தர் தமது வாழ்க்கையில் அனுமதித்த கசப்பான மருந்த தமது எதிர்காலத்தை செழிப்பாக்கும் என்று அறிந்து இந்த வார்த்தையை சொல்கிறார். 2. கர்த்தரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார். அவரைத் திருப்பத்தக்கவர் யார்?: ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது பிள்ளைகளுக்கு எந்த நேரத்தி...

ஆமோஸ்- சுமை சுமப்பவர்

ஆமோஸ் - சுமை சுமப்பவர்* கிறிஸ்து பிறப்பதற்கு முன் 8 ஆம் நூற்றாண்டில் (கி.மு.800 - 700) யூதாவில் பிறந்து இஸ்ரவேல் தேசத்திற்கு தீர்க்க தரிசனம் உரைத்தவர் தான் இந்த ஆமோஸ் என்னும் தீர்க்கதரிசி. *ஆமோஸ்* என்றால் *சுமை சுமப்பவர்* என்று பொருள்படும். இறைவாக்கு உரைக்கும்படி கடவுளிடமிருந்து அழைப்பு பெறுவதற்கு முன்னர், ஆமோஸ் ஆட்டு மந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்திமரத் தோட்டம் பயிரிடுபவராகவும் இருந்தார். *நான் இறைவாக்கினன் இல்லை; இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை* (7:14) என்று அவரே தம்மை அடையாளம் காட்டுகிறார். எப்படி ஆடுமேய்த்த தாவீதை கர்த்தர் அரசனாக்கினாரோ அதே போல தான் ஆடுமேய்த்த ஆமோசையும் கர்த்தர் தீர்க்கதரிசியாய் மாற்றினார். இவர் மேய்ப்பனின் குணாதிசயத்தை அழக்காக ஆமோஸ் 3:12 -ல் கூறி இருக்கின்றார்.  *ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல*  என்று. இந்த வசனத்தின் பொருள் என்னவென்றால் மேய்ப்பனானவன் எந்த சூழ்நிலையிலும் கொடிய விலங்கிடம் அகப்பட்ட ஆட்டை காப்பாற்ற வேண்டும். சிங்கம் தான் பிடித்து விட்டதே. இனி அந்த...

ஊழியத்தின் மதிப்பீடு

இன்றைய ஊழியர்களின் , ஊழியங்களின் மதிப்பீடு ‌. பெட்டி கடை. மளிகை கடை,  மொத்த வியாபார கடை,  டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆன்லைன் ஷாப்பிங், என பல இருக்கிறது.  இந்த மாதிரி தான் சபைகளும் பிரிக்கப்படுகிறது.  பெட்டி கடை சபை . மளிகை கடை சபை.  மொத்த வியாபார சபை. டிபார்ட்மெண்ட் சபை.  ஆன்லைன் சபை. ஒவ்வொரு வியாபாரக் கடையும் ஒவ்வொரு வியாபாரக் கடையையும் மதிப்பதில்லை.  நம்ம வியாபாரத்தில் மண்ணள்ளிப் போட்டுடானே என்ற புலம்புகிறார்கள்.  இதே போல தான் சபையும் புலம்புகிறது. ஆரம்ப கால ஊழியம் பெட்டிக்கடை போலானது.  அன்று ஒரு ஆள் வந்தாலே பெட்டி கடைக்காரருக்கு ரொம்ப சந்தோசம்.  இதே போல தான் பரலோகம். (லூக்கா 15:7 ல்) இயேசு  மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.  பெட்டிக்கடை  மளிகை கடையாக மாறும் போது கொஞ்ச கஷ்டமர்.  (கொஞ்ச விசுவாசிகள்) (கலாத்தியர் 2:2ல்) பவுல்...... நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடி...

சரீரமாகிய ஆலயம்

*சரீரமாகிய ஆலயம் * உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். - (1கொரிந்தியர் 6:19-20). நம்மில் அநேகர், அளவுக்கு மீறி வேலைகளை செய்து, மிகவும் சோர்ந்து, களைப்படைந்துப் போகிறோம். ஒரேயடியாக வேலை வேலை என்று அதிலேயே கவனமாக இருப்பதால் நம் சரீரத்தைக் குறித்து கவலையற்றவர்களாக காணப்படுகிறோம். நம்முடைய ஆவிக்குரியக் காரியங்களும், உணர்ச்சிகளுக்குரிய, சிந்தனைகளுக்குரிய காரியங்களும் நம் சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. நம் சரீரத்தை கவனமாக பராமரிக்கத் தவறும் போது, நம் சரீரம்மாத்திரமல்ல, நம்முடைய எல்லா சிந்தனை, உணர்ச்சி, ஆவிக்குரிய வகைகளிலும், நோய்வாய்ப்பட்டுப் போகிறோம். இந்நாட்களில் தொலைக்காட்சிகளில் நம் உடல்நிலையைக் குறித்த அநேக மருந்தகளையும், உடற்பயிற்சி கருவிகளையும், குறித்த விளம்பரங்களையும் காண்கிறோம். அந்த விளம்பரங்களைப் பார்த்து, வாங்கி, சரீரத்தின...

அந்நிய பாஷையின் நன்மைகள்

*அந்நிய பாஷையின் நன்மைகள் மற்றும் ஆச்சரியங்களும்.* (ஏசாயா 28:11)ல் பரியாச உதடுகளால் அந்நிய பாஷையால் உங்களோடு பேசுவேன் என்றார். பரியாச உதடுகள் என்றால் உளறல் (Trembling). ஒரு வார்த்தையை திரும்ப திரும்ப உளறல் என அர்த்தம். அந்நிய பாஷை பேசுகிறவர்கள் ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் பேசுவதை உளறலாக கேட்பீர்கள். ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள். அளவில்லாத எழுத்துக்கள் உண்டு. ஆகவே அது உளரல் அல்ல அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். ஆங்கிலம்போல் 26 எழுத்துக்கள் அல்ல, தமிழ்போல் 247 எழுத்துக்கள் அல்ல.. பரலோகத்தில் தேவ\தூதர்கள் பல மொழிகளில் பேசுகிறார்கள். அந்நிய பாஷையை மெல்ல மெல்ல பேசி கற்க வேண்டும். இந்த மொழி நம் சரீரத்தில் உள்ளது. நம் தாய்மொழி தமிழை நாம் படிக்காமலே சிறு குழந்தையில் பேசுகிறதெப்படி? நாம் அந்நிய பாஷையை ஆண்டவரிடம் கேட்டு ஜெபிக்க வேண்டும். அதை பெறும்போது உளறி உளறி பேசுவதுபோல் இருக்கும். அந்நிய பாஷையில் தேவன் பேசுவார் என்பதற்க்கு ஆதாரம் :(ஏசாயா 28:11) பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல், இதுவே ஆறுதல் என்று அவர்கள...

நன்றியுள்ள இருதயம்

*நன்றியுள்ள இருதயம்* அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17: 17-19). வியட்நாமில் நடந்த போரில், ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு, அதன் காயங்களினால் அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது, அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த போர்வீரனையும் அழைத்திருந்தார்கள். அந்த கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக வந்ததுமன்றி, நன்கு குடித்துவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த உணவு பொருட்களை அநாயசமாக சாப்பிட்டதுமன்றி, தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக ஒரு நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல, சாப்பிட்டு முடித்தவுடன், தன்னை அழைத்திருந்த அந்தக குடும்பத்திற்கு...

நேர்மையற்ற ஊழியனின் அடையாளங்கள்

நேர்மையற்ற ஒரு ஊழியனின் அடையாளம்.* *எழுப்புதல் எழுப்புதல் என்று ஆர்ப்பரிக்கும் கள்ள ஊழியனின் செயல்பாடுகள்* அன்பு தணிந்து போகும்.  (மத் 24:12) இயேசு கிறிஸ்து வரும் பொழுது அவர் எதிர்பார்த்த விஸ்வாசம் இல்லாத நிலை. (லூக் 18:8) முடிவு பரியந்தம் நிலைத்து நில்லுங்கள் என்று தான் வேதம் சொல்லுகிறது.  எழுப்புதல் வருமா, வராதா? *இழிவான ஆதாயத்தை இச்சிக்கும் செழிப்பின் உபதேசத்தின் அடையாளங்கள்* *மக்களை வஞ்சிக்கும் உபதேசத்தின் அடையாளங்கள்* √ (1). மனம்திரும்புதல் இல்லாத விசுவாசம். ஞானஸ்நானம். திருவிருந்து.  √ (2). நீதி இல்லாத அன்பு. √ (3). தாழ்மை இல்லாத பரிசுத்தம். √ (4). கீழ்படிதல் இல்லாத ஆராதனை. √ (5). பாவமன்னிபு இல்லாத அற்புதங்கள். √ (6). இரட்சிப்பு (மீட்பு) இல்லாத ஞானஸ்நானம் (திருமுழுக்கு). √ (7). ஒப்புரவாதல் (சமரசம்) இல்லாத காணிக்கை. √ (8). தேவசித்தம் இல்லாத ஜெபம். √ (9). ஐக்கியம் இல்லாத ஆராதனை. √ (10). அழைப்பு இல்லாத ஊழியம். √ (11). கனி இல்லாத அபிஷேகம். √ (12). தேவனுடைய வார்த்தை இல்லாத தீர்க்கதரிசனம். √ (13). வேலைக்கார சிந்தை இல்லாத தலைமை. √ (14). சிலுவை இல்லாத கிறிஸ்து. √ (15). சிட...

மூட பழக்கவழக்கங்கள்

*மூட பழக்க வழக்கங்கள்* 'புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்'. - (எரேமியா 10:2).   எத்தனையோ விதமான மூடப்பழக்க வழக்கங்கள் உடைய மக்களிடையே நாம் வாழ்ந்து வருகிறோம். வெளியே செல்லும்போது பூனை குறுக்கே சென்றால் சகுனம் சரியில்லையென்று திரும்பி வருபவர்களும் உண்டு, நல்ல நேரம் பார்த்தே காரியங்களை செய்பவர்களும் உண்டு. பிறப்பு, இறப்பு, திருமணம் என ஒவ்வொன்றிற்கும் மக்கள் சொல்லும் மூடப்பழக்க வழக்கங்கள் ஏராளம், ஏராளம்! இப்படிப்பட்ட மக்கள் மத்தியிலே விசுவாசிகளாகிய நாம் எப்படி வாழ வேண்டுமென்று வேதம் நமக்கு தெளிவாக போதிக்கிறது. (எரேமியா 10:2-ல்) ஆண்டவர் முதலாவதாக கூறும் காரியம், 'புறஜாதிகளுடைய மார்க்கத்தை கற்று கொள்ள கூடாது' என்று கூறுகிறார். அவர்களின் மூடப்பழக்கத்தை குறித்து விசாரிப்போமானால் நாமும் அவர்களை போல் பயந்து அவைகளுக்கு அடிமையாகி விட வாய்ப்புகள் அநேகம் உண்டு. உதாரணத்திற்கு கண்திருஷ்டி என்ற காரியத்திற்கு பயப்படும் கிறிஸ்வர்களும் அநேகர் உண்டு. தங்களுடைய சிறுபிள்ளைகள்...

உன்னதமான ஊழியர்

இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள்.* (அப்போஸ்தலர் 16:17) உன்னதமான தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்கள் இந்த பூமியில அழிந்து போய் கொண்டிருக்கும் அல்லது ஆத்மாக்களை நஷ்டப்படுத்திக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் வைத்திருக்கிற இரட்சிப்பை சுவிசேஷமாக அறிவிக்க வேண்டியது ஒரு ஊழியக்காரனின் கடமை. இந்த உண்மை ஒரு ஊழியக்காரனுக்கு தெரியுமோ தெரியலையோ ஆனால் குறி சொல்லுகிற அசுத்த ஆவிக்கு தெரிந்திருக்கிறது. (நமக்கு தெரிந்திருப்பதெல்லாம்  நான் ஒரு போப் ஆண்டவர். நான் ஒரு பிஷப். நான் ஒரு ரெவெரென்ட் நான் ஒரு அப்போஸ்தலன். நான் ஒரு தீர்க்கதரிசி. நான் ஒரு வரம் பெற்றவன். நான் ஒரு சங்கை. நான் ஒரு நடமாடும் வேதாகமம் கல்லூரி. நான் ஒரு மேய்ப்பன். நான் ஒரு போதகன். நான் ஒரு டீச்சர். நான் ஒரு ஊழியக்காரன். ஆனால் குறி சொல்லுகிற ஆவிக்கு தெரிகிறது. உன்னதமான தேவனுடைய இரட்சிப்பை மனிதர்களுக்கு அறிவிக்கிற ஊழியர்கள் என்று ஊழியம் ஒரு பதவியாக அனைவருக்கும் இருக்கிறதே ஒழிய மற்றவர்களுக்கு சேவை செய்து உயிரை காப்பாற்ற வேண்டும் என்று அக்கறை அநேகருக்கு குறைவா...

ஆத்துமாக்களை காப்பாத்துங்க

ஜான் ஹார்ப்பர் - அழிகின்ற ஆத்துமாக்களை காப்பாத்துங்க மக்களே உங்கள் அனைவருக்கும் டைட்டானிக் கதை நன்றாகவே தெரிந்திருக்கும். மனிதன் தனக்கு மீறின சக்தி ஒன்று உண்டு என்று உறுதியாய் நம்பின வருடம் 1912... இதை பற்றின பல கதைகளை கேட்டிருப்பீர்கள். இதோ மரண ஓலத்தில் எப்படியாவது பிழைத்துவிட மாட்டோமா என்று அனைவரும் நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்த போது மரணத்தை பார்த்து பயப்படாத ஓர் கிறிஸ்தவனை பற்றின உண்மைக் கதை. டைட்டானிக் கப்பல் உடைந்த சம்பவம் நடந்து நான்கு வருடங்களுக்கு பிறகு டைட்டானிக் கப்பல் விபத்திலிருந்து தப்பித்தவர்கள் நினைவு கூட்டத்திற்கு அழைக்கபட்டிருந்தார்கள். அங்கு வந்த ஓர் இளைஞன் அனைவரின் மனதையும் கவர்ந்தார். இந்த இளைஞன் உடைந்து போன கப்பலின் நடுவே மாட்டிகொண்டு உயிருக்கு போராடிகொண்டிருந்தார். அப்பொழுது இவருடன் கப்பலில் வந்த ஜான் ஹார்ப்பர் என்பவர் இவரை காப்பாற்றி ஓர் சிறு படகில் ஏற்றினார். அவர் கேட்ட ஓர் கேள்வி *நீர் ரட்சிக்கப்பட்டு விட்டீர்களா?*. அவ்விளைஞன் *இல்லை* என்றான். *இதனை விட அதிக மீட்பை கொண்ட ஒன்றை பற்றி உனக்கு தெரிய வேண்டி உள்ளது* என்று கூறின ஜான் அவருடன் சுவிஷேசத்தை பகிர்ந்து...

ஜெபத்தை உயர்வாய் மதித்த

*ஜெபத்தை உயர்வாய் மதித்த ஒரு மனிதர், "எப்பாப்பிரா" கொலோசெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் அனுப்பின நிருபத்தின் முடிவில், அவர் இவ்வாறு சொல்கிறார்: “எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.”—கொலோசெயர் 4:12, 13. ஆம், ரோமில், பவுலின் ‘‘உடன் கைதியாய்” எப்பாப்பிரா இருந்தபோதுங்கூட, கொலோசெயிலும், லவோதிக்கேயாவிலும், எராப்போலியிலும் இருந்த தன் மிக நேசமான சகோதரர்களைப் பற்றி அவர் சிந்தித்துக்கொண்டும், அவர்களுக்காக ஜெபித்துக்கொண்டும் இருந்தார். (பிலேமோன் 23) சொல்லர்த்தமாய், ஜெபத்தில் அவர்களுக்காகப் ‘போராடினார்.’ அறிவாளர் டி. எட்மண்ட் ஹீபெர்ட் சொல்லுகிறபடி, இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்கப் பதம், ‘விடாமுயற்சியுடனும் பெரும் திய...

ஜெபத்தை உயர்வாய் மதித்த ஒரு மனிதன்

Image
ஜெபத்தை உயர்வாய் மதித்த ஒரு மனிதர், "எப்பாப்பிரா" கொலோசெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் அனுப்பின நிருபத்தின் முடிவில், அவர் இவ்வாறு சொல்கிறார்: “எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவ எல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க வேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன்.”(கொலோ 4:12, 13.) ஆம், ரோமில், பவுலின் ‘‘உடன் கைதியாய்” எப்பாப்பிரா இருந்தபோதுங்கூட, கொலோசெயிலும், லவோதிக்கேயாவிலும், எராப்போலியிலும் இருந்த தன் மிக நேசமான சகோதரர்களைப் பற்றி அவர் சிந்தித்துக்கொண்டும், அவர்களுக்காக ஜெபித்துக்கொண்டும் இருந்தார்.  (பிலேமோன் 23)  சொல்லர்த்தமாய், ஜெபத்தில் அவர்களுக்காகப் ‘போராடினார்.’   அறிவாளர் டி. எட்மண்ட் ஹீபெர்ட் சொல்லுகிறபடி, இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்கப் பதம், ‘விட...