கர்த்தருக்குள் மரித்தவர்கள்
கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியர்களாக வாழ்ந்து மரிக்கிறவர்களுக்குக் கிடைக்கும் மேன்மையான பாக்கியங்களை வேதாகம வசனங்களின் அடிப்படையில் காணலாம்:
1). நித்திய இளைப்பாறுதல்: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டு நீங்கி இளைப்பாறுவார்கள்.
வசனம்: "கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தங்கள் பிரயாசங்களுக்கு நீங்கி இளைப்பாறுவார்கள்..." (வெளிப் 14:13).
2). ஜீவகிரீடம்: மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களுக்கு கர்த்தர் ஜீவகிரீடத்தைத் தருவார்.
வசனம்: "...நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்" (வெளிப் 2:10).
3). நீதியின் கிரீடம்: ஊழியத்தை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு நீதிபரராகிய கர்த்தர் நீதியின் கிரீடத்தை ஆயத்தம் செய்துள்ளார்.
வசனம்: "இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்த நாளில் அதை எனக்குத் தந்தருளுவார்"
(2 தீமோத் 4:8).
4). மகிமையுள்ள கிரீடம்: மந்தையை உண்மையாக மேய்க்கும் ஊழியர்களுக்கு வாடாத மகிமையுள்ள கிரீடம் கிடைக்கும்.
வசனம்: "பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்" (1 பேதுரு 5:4).
5). பரலோக மகிழ்ச்சியில் பங்கு: உண்மையும் உத்தமுமுள்ள ஊழியக்காரனாக வாழ்ந்தவர்கள் கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பார்கள்.
வசனம்: "நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே... உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றார்" (மத்தேயு 25:21).
6). கிறிஸ்துவுடனே இருத்தல்: மரணத்திற்குப் பின் அவர்கள் எக்காலமும் கர்த்தருடனே கூட இருப்பார்கள். இதுவே மிகப்பெரிய பாக்கியம்.
வசனம்: "இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்"
(1தெசலோ 4:17).
7). நட்சத்திரங்களைப் போல பிரகாசித்தல்: பலரை நீதிக்குட்படுத்தின ஊழியர்கள் என்றென்றைக்கும் நட்சத்திரங்களைப் போல பிரகாசிப்பார்கள்.
வசனம்: "...அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் என்றென்றைக்குமுள்ள நட்சத்திரங்களைப்போலப் பிரகாசிப்பார்கள்" (தானியேல் 12:3).
பரிசுத்த சகோதர சகோதரிகளுக்கு "கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள்." " பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன், அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது, அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம், ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார் என்று சொல்லிற்று." (வெளி.14:12) ஆமென். மேலும் அறிந்து கொள்ள வேதத்தை வாசியுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
கிறிஸ்துவின் பணியில் சகோதரன் சிலுவை ராஜா.
WhatsApp 9841 711 591.
Comments