அரசியல் கறைபடும் கிறிஸ்தவத்திற்கு ஓர் எச்சரிக்கை.
இன்றைய காலகட்டத்தில், ஆன்மீகமும் அரசியலும் ஒன்றோடொன்று கலக்கப்பட்டு, சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது உலகளாவிய ரீதியில் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, தூய்மையான அன்பையும் நீதியையும் போதிக்கும் கிறிஸ்தவ மார்க்கத்தை,(தேவனுடைய சபையை) தங்களின் சுய அரசியல் ஆதாயங்களுக்காகச் சிலர் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய சுயநல அரசியல்வாதிகளுக்குத் தங்களின் தனிப்பட்ட சலுகைகளுக்காகவும் பணத்திற்காகவும் சில ஆன்மீக ஊழியர்களும் உடன்போகிறார்கள். இந்தச் சூழ்நிலை விசுவாசிகளிடையே பெரும் குழப்பத்தையும், சமுதாயத்தில் தேவ நாமம் அவமதிக்கப்படுவதற்கும் வழிவகுக்கிறது. மனிதர்களின் இருதயங்களையும் எண்ணங்களையும் ஆராய்கிற சர்வவல்லமையுள்ள தேவன், தம்முடைய பரிசுத்தமான வார்த்தைகளும் நாமமும் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்படுவதை ஒருபோதும் சகிப்பதில்லை. தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமம் (Holy Bible), இத்தகைய போலி ஆன்மீக அரசியல்வாதிகளையும், அவர்களுக்குத் துணைபோகும் சுயநல ஊழியர்களையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கிறது. அதே வேளையில், விசுவாச சமூகம் இத்தகைய வஞ்சக வலைகளில் சிக்காமல் தங்களை...