தற்கொலை முடிவு அல்ல

தேவன் நமக்கு கொடுத்த வாழ்வு (வாழ்கை) விலைமதிப்பற்ற பரிசு.
தற்போது தற்கொலை நமது தேசத்தில் அதிகமாக நடைபெறுகிறது. 

கடன் பிரச்சனை, குடும்ப பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, காதல் தோல்வி, பிசினஸ் தோல்வி, இப்படி பல காரணங்களால் இவைகள் நடக்கிறது. 

ஆனால் பரிசுத்த வேதாகமம்
 தற்கொலை ஒரு தீர்வாகாது என்பதைப் ஆணித்தரமாகக் கூறுகிறது. 
மனச்சோர்வோ அல்லது போராட்டமோ உங்களை வாட்டும்போது வேதாகமம் தரும் சில முக்கியமான ஆலோசனைகள்.
கவனியுங்கள்:
 
1. உங்கள் உயிர் உங்களுடையது அல்ல 
"உங்கள் சரீரமானது... தேவனால் உங்களுக்குத் தந்தருளப்பட்ட பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" 
(1 கொரி 6:19). உங்கள் உயிரைத் தீர்மானிக்கும் அதிகாரம் தேவனுக்கு மட்டுமே உண்டு. 

2. தேவன் உங்களைக் கைவிடமாட்டார்
"நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்" (ஏசாயா 41:10). நீங்கள் கடந்து செல்லும் கடினமான பாதையில் அவர் உங்கள் கரத்தைப் பிடித்திருக்கிறார். 

3. உங்கள் பாரங்களை அவரிடம் இறக்கி வையுங்கள்
"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" 
(மத்தேயு 11:28). உங்கள் கவலைகளையும் கண்ணீரையும் அவரிடம் ஜெபத்தின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்; அவர் உங்களுக்குப் புதிய பெலனைத் தருவார். 

4. உங்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் உண்டு
"நீங்கள் எதிர்பார்ப்பை அடையும்படிக்கு, நான் உங்களைப்பற்றி நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே" (எரேமியா 29:11). தற்காலிகத் தோல்விகளோ அல்லது வலிகளோ உங்கள் முடிவல்ல; தேவன் உங்களுக்காக ஒரு மேலான திட்டத்தை வைத்திருக்கிறார். 

5. உடைந்த உள்ளத்திற்கு அவர் அருகில் இருக்கிறார் 
"உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்" (சங்கீதம் 34:18). உங்கள் வேதனையை அவர் உணருகிறார், உங்கள் காயங்களுக்குக் கட்டுகளைப் போடுகிறார். 

தற்கொலை எண்ணங்கள் உங்களை வாட்டினால் தயவுசெய்து இவற்றைப் பின்பற்றுங்கள்:
உங்களுக்கு நம்பிக்கையான நண்பர் அல்லது போதகரிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
ஆண்டவரிடம் உங்கள் உள்ளத்தை ஊற்றி ஜெபியுங்கள்.
உடனடியாகத் தற்கொலைத் தடுப்பு உதவி எண்களைத் (Helpline) தொடர்பு கொள்ளுங்கள். 

தேவன் உங்களை நேசிக்கிறார்! 
உங்கள் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை, ஒரு புதிய ஆரம்பத்திற்காக அவர் காத்திருக்கிறார். 
இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் உதவி செய்வார் அவரை நம்புங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென். 
கிறிஸ்துவின் பணியில் 
சகோதரன் 
சிலுவை ராஜா.

Comments

Anonymous said…
Praise God.

Popular posts from this blog

மற்றவர்களை பார்க்க வேண்டாம்.

உணர்ச்சியுள்ள கிறிஸ்தவனே கிறிஸ்தவத்துக்கு விரோதமாக நடப்பதை நீ அறியாயோ ! ?

திருச்சபை