தவறான போதனைகளை கண்டறிவது
ஒரு கிறிஸ்தவ விசுவாசி தவறான போதனைகளைக் கண்டறிய பரிசுத்த வேதாகமம் சில தெளிவான வழிகாட்டல்களை நமக்கு வழங்குகிறது. அவற்றைக் கீழே காணலாம்:
1.வேதவசனங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் (பெரேயா பட்டணத்தார் முன்மாதிரி)
போதிக்கப்படும் காரியங்கள் வேதாகமத்தின் அடிப்படை உண்மைகளுக்கு இணங்குகிறதா என்று சோதிக்க வேண்டும்.
"அவர்கள்... மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்..."
(அப் 17:11).
2. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய போதனை.
இயேசு கிறிஸ்துவின் தெய்வீகம், அவருடைய மனித அவதாரம் மற்றும் சிலுவை மரணத்தின் நோக்கத்தை மறுக்கும் எந்தப் போதனையும் தவறானது.
"இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்தாரென்று அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது... இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்தாரென்று அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல."
(1 யோவ 4:2-3).
3. போதகர்களின் கனிகள் (வாழ்க்கை முறை)
ஒருவருடைய போதனை உண்மையானது என்றால், அவருடைய வாழ்க்கை கிறிஸ்துவின் பண்புகளைப் பிரதிபலிக்கும். பண ஆசை அல்லது உலக இச்சைகளைத் தூண்டும் போதனைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
"அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்."
(மத்தேயு 7:16).
4. வேறு ஒரு சுவிசேஷம்
பரிசுத்த வேதாகமம் சொல்லும் இரட்சிப்பின் வழிக்கு மாறாக (கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு வரும் இரட்சிப்பு), கிரியைகளினாலோ அல்லது மனித கற்பனைகளினாலோ வரும் இரட்சிப்பை ஒருவன் போதித்தால் அது சாபத்திற்குரியது.
"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், வேறொரு சுவிசேஷத்தை நாங்கள் ஆக்கிலும்... பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்."
(கலா 1:8).
5 . பரிசுத்த ஆவியானவரின் துணை
சத்திய ஆவியாகிய ஆவியானவர் விசுவாசிகளைச் சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துவார். ஆவிக்குரிய விவேகத்திற்காக விசுவாசிகள் ஜெபிக்க வேண்டும்.
"சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்." (யோவான் 16:13).
சுருக்கமாக:
ஒரு போதனை வேதாகமத்திற்குப் புறம்பாக இருந்தாலோ, கிறிஸ்துவின் மகிமையைக் குறைத்தாலோ அல்லது உலக ஆசைகளைத் தூண்டினாலோ அது தவறான போதனை என்பதை விசுவாசிகள் உணர வேண்டும்.
அப்படி உணர்ந்து நாம் கண்டுபிடித்தால் வாழ்க்கை மிகச் சிறப்பானதாக இருக்கும்.
கூடுமான அளவு வேதத்தை போதிக்கிற ஊழியர்களை பாராமல் கையில் இருக்கிற வேதத்தை சரியாக பார்த்தால் போதும்.
உங்கள் வாழ்க்கை வெளிச்சமாக மாறும். கர்த்தர் உங்களை
ஆசீர்வதிப்பாராக ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா.
Comments