காணிக்கை கொண்டு வருகிறான்
415) உயர்ந்த முத்துக்கள்.
ஒரு காணிக்கை கொண்டு வருகிறான்.
(லேவி 1:2)
'காணிக்கை' என்ற (எபிரேய மொழியில் 'கொர்பான்') பெயர் சொல்'கிட்டிச் சேருதல்' என்னும் வினைச்சொல்லுடன் தொடர்புடையது. எனவே காணிக்கை என்பது இஸ்ரவேலின் விசுவாசிகள் தேவனுடைய சமூகத்தில் அவரருகில் வந்து அவருடைய உறவையும், ஆசீர்வாதங்களையும் பெற்று அனுபவிப்பதற்காக அவருக்குப் படைக்கும் ஒரு வெகுமதியாகும்.
(சங்க 73:28)
லேவி 1 ஆம் அதிகாரங்கள் 1 முதல் 7 வரை ஐந்து காணிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன :
தகன பலி (லேவி 1:3-17),
போஜன பலி (2:1-16),
சமாதான பலி (3:1-17),
பாவநிவாரண பலி (லேவி , அதிகாரம் 4),
குற்ற நிவாரண பலி (லேவி 5:14-6:7; 7:1-7),
2. காணிக்கை படைத்தவர்களின் நோக்கங்கள் :
நன்றி செலுத்துதல், தமது விசுவாசத்தை அறிக்கையிடுதல், தமது உறவை புதுப்பித்துக் கொள்ளுதல், தேவனோடுள்ள பற்றுதலை உறுதிப்படுத்துதல், தமது பாவங்களுக்கு மன்னிப்பு வேண்டுதல், காணிக்கைகள் உண்மையில் செயல் முறைப்படுத்தப்பட்ட அவர்களுடைய விண்ணப்பங்களாயிருந்தன. (சங்க 116:17;ஒசியா 14:2;எபி 13:5).
3. பல தடவைகளில் ஒரு காணிக்கை என்பதில் ஒரு தியாகம் அடங்கியிருந்தது. அதாவது ஒரு மிருகத்தின் உயிர் பலியிடப்பட்டது.
(லேவி 9:8)
4. இந்தப் பலிகள் இஸ்ரவேலருக்குப் போதித்தவைகள் :
மனிதர் அடிப்படையிலேயே பாவிகள். அவர்களுடைய பாவங்களின் பலன் 'மரணம்'
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பு இல்லை.
(லேவி 17:11;எபி 9:22)
ஒருவருக்காக இன்னொருவர் உயிர் விடுதல் மூலம் பாவ நிவாரணம் உண்டாக்கப்பட வேண்டும்.(லேவி 1:4; 17:11)
தேவனுடைய பரிசுத்தம் மனித வாழ்க்கையை ஒழுங்குப்படுத்தி, ஒவ்வொரு பகுதியிலும் வழி காட்ட வேண்டும். (லேவி 10:3)
தேவன் கிருபை நிறைந்தவராகவும், மன்னிக்கிறவராகவும், மக்களினத்தோடு உறவு கொள்ள விரும்புகிறவராகவும் இருக்கிறார். (யாத் 34:6,7).
5. ஒரு காணிக்கை தேவனுக்குப் பிரியமாயிருந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், அங்கே ஒரு இதய பூர்வமான மனம் திரும்பிய நிலையும், தேவனுடைய நீதியிலும், உண்மையிலும் நடப்பதாக முழு அர்ப்பணம் செய்திருத்தலும் அவசியம். (லேவி 23:27-29;ஏசா 1:11-17; மீகா 6:6-8)
இன்றைய உயர்ந்த முத்திலிருந்து காணிக்கை பற்றிய ஆய்வு தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்.
கிறிஸ்துவின் பணியில்
சகோதரன்
சிலுவை ராஜா
Comments