ஜெபமே ஜெயம்
*(420) உயர்ந்த முத்துக்கள்* *ஜெபமே ஜெயம்.* பால் யாங்கி சோ ஊழியம் ஜெபத்தினால் மட்டுமே வளர்ந்தது என்று பேசப்படுகிறது. ஜெபத்தினால் மாத்திரம் அல்ல கடினமான உழைப்பு. அது பால் யாங்கி சோ வால் அல்ல அவருடைய மனைவியின் அம்மா (மாமியார்)மூலமாக சபை அசாதாரணமான வளர்ச்சி அடைந்தது. பால் யாங்கி சோவுக்கு அழைப்பும்,தரிசனமும் இருந்தது. ஜனங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற பாரமும் அதிகமாக இருந்தது. அதிலேயே தன் நேரத்தையும் காலத்தையும் கடத்தினார். மனைவியை கவனிக்கவில்லை மனைவியின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் அவர்களுடைய மாமியார் தன் மருமகன் பால் யாங்கி சோவை மனைவியை கவனிக்க வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் அந்த ஊழியத்தை கையில் எடுத்துக் கொண்டார். விளைவு, பல நூறு (செல் குழுவை) வீட்டு சபைகளை ஆரம்பித்தார். சபை மாபெரும் வளர்ச்சி நோக்கி பயணித்தது. பால் யாங்கி சோ வின் ஊழிய வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள், அவர் நிறுவிய யோய்டோ முழு சுவிசேஷ சபை (Yoido Full Gospel Church) உலகின் மிகப்பெரிய சபையாக உயர்ந்தது, அவரது சீடத்துவத்திற்கான 'செல் குழு' (cell group) முறை, மற்றும் கொரியப் போரு...