Posts

Showing posts from September, 2025

உயிர்த்தெழுதலுக்கு முன்னும் பின்னும் நடப்பது என்ன?

 (410) உயர்ந்த முத்துக்கள்.  உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன ? சீயோனில் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக கிறிஸ்துவின் ரத்தம் தெளிக்கப்பட்டு நாம் ஆசாரியர்களாக, ராஜாக்களாக ஆயிரம் வருடம் கிறிஸ்துவோடு கூட ஆளுகை செய்வோம் என்பதை குறித்து பார்த்தோம். ஆசாரியத்துவ ஊழியத்தை மூன்று காலங்களாக, அதாவது கடந்த(இறந்த) காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகும். 1) கடந்த காலம். பழைய உடன்படிக்கையின் கீழ் உள்ள ஆசாரியர்கள் (யூத மத குருமார்கள்) 10 கட்டளைகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டது, ஆசரிப்புக்கூடாரத்திலும், பின்னர் கோவிலிலும் பலி செலுத்துதல், ஆராதனை நடத்துதல், மற்றும் உடன்படிக்கைப் பெட்டியைப் பாதுகாத்தல் போன்ற கடமைகளைச் செய்தல் வேண்டியிருந்தது. அவர்கள் மக்களுக்கு கடவுளின் சட்டத்தை எடுத்துரைத்து, அவர்களின் பாவங்களுக்குப் பரிகாரம் செய்யும் விதமாக பலரின் மூலம் பாவமன்னிப்பு பெற வேண்டும்.  ஆசாரியர்களின் முக்கிய கடமைகளாகும்: பலி செலுத்துதல்: பழைய ஏற்பாட்டின்படி, மக்களுக்குப் பாவமன்னிப்பு கிடைக்க பலியிடும் கடமை ஆசாரியர்களுக்கு இருந்தது. மிருகங்களைப் பலி செலுத்த...

உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன 4

 (409) உயர்ந்த முத்துக்கள். உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன ? கடந்த நாட்களில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் நாம் மீட்கப்பட்டுள்ளோம். என்று, மூன்று விதமான முறையில் நாம் கழுவப்படுவதையும் அல்லது சுத்திகரிக்கப்படுவதையும், மாத்திரமல்ல இயேசு கிறிஸ்துவின் இரத்தம், பூமியில் அல்ல, சீயோனில் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம் மேல் தெளிவுபடுத்தப்படும் என்பதை நாம் தொடர்ந்து சிந்தித்து வருகிறோம். ஆகையால் பரிசுத்த  வேதம் சொல்கிறது. பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; (வெளிப் 14:13) ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலில் எழுந்தார்கள். பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். (1 தெசலோ 4:16-17) இயேசு கிறிஸ்து யாருக்காக வருவார் ? கிற...

அடுத்தடுத்து நடப்பது என்ன 2

 (407) உயர்ந்த முத்துக்கள். உயிர்த்தெழுந்த பின்பு அடுத்தடுத்து நடப்பது என்ன ? கடந்த நாள் முடிக்கும் பொழுது மீட்கப்பட்டவர்கள் மேல் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தெளிக்கப்படும் (1பேது 1:2) ஏற்கனவே நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பை பெற்றிருக்கிறோம் (கொலே 1:14; எபே 1:7). அடமானம் வைத்த பொருளை மீட்பது போல, இயேசு கிறிஸ்து மூலமாக, பிதாவாகிய தேவன் நம்மை மீட்டுக் கொண்டார். (கிறிஸ்துவின் இரத்தத்தை கிரயமாக செலுத்தி) (1கொரி 6:20; 7:23). ஆதாம் ஏவாள் இருவரும் பிசாசுக்கு இடங்கொடுத்து தம்மையும், வருங்கால சந்ததியையும், தேவன் ஆதாமுக்கு கொடுத்த சகல ராஜ்ஜியங்களையும், அதிகாரங்களையும், வல்லமையையும் சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டான். (லூக் 4:6; மத் 4:9) இயேசு கிறிஸ்து, கல்வாரி சிலுவையில்(சர்வலோகத்தின் பாவத்திற்காக) தம்முடைய கடைசி சொட்டு இரத்தத்தையும், சிந்தி, மரித்து ,அடக்கம் பண்ணப்பட்டு , மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பின்பு, அவர் சொன்னதை கவனிக்க வேண்டும். (மத்தேயு 28:18ஐ) அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக்...

ஓய்வு நாள்

 (405) உயர்ந்த முத்துக்கள். ஓய்வு நாள், வார ஓய்வு நாள்.  வார ஓய்வுநாள்.(கிரேக்க மொழியில் 'சபாற்றன்'இதன் பொருள், "ஓய்வு", கிரியைகளை நிறுத்துதல் என்பதாகும். வாரத்தின் ஏழாவது நாள், மோசேயின் சட்டத்தின்படி சாதாரண வேலைகள் அனைத்தையும் நிறுத்தி, அனைவருக்கும் ஓய்வு கொடுக்கும் நாள். அந்த நாளில் அனைவரும் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ள வேண்டும். (யாத் 20:10;உபா 5:14;யாத் 20:8) ஓய்வு நாள் பற்றிய கொள்கைகள் அனைத்தும் கிறிஸ்தவர்களுக்கு நிரந்தரமாக பின்பற்றத்தக்கவை. எனவே வாரத்தில் ஒரு நாளை இதற்கென்று தனியாகப் பிரத்தியோகப் படுத்தி அன்று அனைவரும் ஓய்வு எடுக்கவும் ஆண்டவரை தொழுது கொள்ளவும் வேண்டும் என்பதற்கு உறுதியான காரணங்கள் உள்ளன.  1) யூதர்களுடைய சட்டத்திற்கு முன்னரே "தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்". (ஆதி 2:3;யாத் 20:11) படைப்புக் காலநாட்களில் தேவன் ஏழு நாட்களில் ஒரு நாள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதத்தின் ஊற்றான ஒரு நாளாகவும், யூத இனத்திற்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் அது ஓய்வு நாளாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.  2) இயேசு கிறிஸ்து ஒருபோதும் ஓய்வு...

நம்புவதில்லை

*நம்புவதில்லை* *பழத்தை தின்றால் மரணம் நேரிடும் என்றப்போது மனிதன் நம்பவில்லை..* *ஜலப்பிரளயம் வரப்போகிறது பேழைக்குள் வந்துவிடுங்கள் என்று நீதிமானாகிய நோவா கதறியபோது மனிதன் நம்பவில்லை..* *பட்டணம் அழியப்போகிறது திரும்பிப் பாா்க்காதே என்றபோது லோத்தின் மனைவி நம்பவில்லை..* *தலைப்பிள்ளை சங்காரம் வருகிறது என் ஜனங்களை விட்டுவிடு என்று தீர்க்கதரிசி மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை..* *கானானியர்களை வெல்ல நம்முடன் ஆண்டவர் இருக்கிறார் என்று காலேப் சொன்ன போது ஜனங்கள் நம்பவில்லை..* *மேசியா பிறந்து விட்டார் என்றபோது ஜனங்கள் அதை நம்பவில்லை..* *அவர் மீண்டும் வருவார் என்ற போதும் ஜனங்கள் இன்னும் அவரை நம்பவில்லை.* *ஆனால் அவரது  வார்த்தைகளை அப்படி நம்பும் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் நம்பிக்கை நிச்சயம் தோற்பதில்லை..  என் ஆண்டவர் நிச்சயம் மகிமையோடே வெளிப்படுவார்.* *பூமியிலுள்ள யாவருடைய கண்களும் நிச்சயம் அவரைக்காணும்..* *அவருடைய வருகைக்கு/பிரசன்னமாகுதலுக்கு ஆயத்தப்படுங்கள்..* கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். கிறிஸ்துவின் பணியில்  சகோதரன்  சிலுவை ராஜா  தொடர்புக்கு  9841711591.

கடைசி காலத்தில் எழுப்புதல் வருமா?

 *(404) உயர்ந்த முத்துக்கள்.) கடைசி கால எழுப்புதல் வருமா ? எழுப்புதல் பற்றி நாம் பேசுகிறோம் ஆனால் எழுப்புதல் வர நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோமென திருச்சபைகள் அறிந்தும், அறியாமலும் உள்ளன. சில திருச்சபைகள் எழுப்புதலுக்காக பிரபல ஊழியர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மூலமாக எழுப்புதல் வராது.  எழுப்புதலை விரும்புகிறவர்கள் இயேசு கிறிஸ்துவை கவனித்து (எபி 3:1) அவர் என்ன செய்தாரோ அதை செய்ய வேண்டும். 1) தேவனுடைய ஊழியத்தை செய்கிற ஒருவர் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயரால் (மத் 28:19,20;)திருமுழுக்குப் பெறுகிறார் வேண்டும். இயேசுவைப் போல...(மத் 3:16;மாற் 1:9; லூக் 3:21;) 2) தேவனுடைய ஊழியத்தை செய்கிற ஒருவர், பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைப் பெற்றிருக்க வேண்டும். (லூக் 3:22; 4:18; அப் 10:38;) பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெறாத எவருமே பந்தி விசாரணை செய்வதற்கு கூட தகுதி இல்லாதவர்கள். (அப் 6:3) அப்படியானால் தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்கு தகுதி இருக்கிறதா ? என்பதை சிந்தித்துப் பாருங்கள். 3) பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற...

நம்முடைய பாவங்களை சுமந்தார்.

நம்முடைய பாவங்களைச் சுமந்தார். (1பேதுரு 2:24) நம்முடைய பாவங்களுக்கு ஏற்ற தண்டனையை தன் மீது ஏற்றவராய் (எசா 53:4,11-12) நமக்கு பதிலாக இயேசு கிறிஸ்துவானவர் நம்முடைய பாவங்களைச் சுமந்தார். (யோவான் 1:29;எபி 9:28;10:10;) நமக்குப் பாவ பரிகாரத்தை உண்டு பண்ணு வகையில் அவர் மரித்தது எதற்கெனில், நாம் பாவத்தின் வல்லமை, அதிகாரம், மற்றும் குற்ற உணர்வினின்று முற்றிலும் விடுவிக்கப்படவேயாகும். இயேசு கிறிஸ்து தம்முடைய மரணத்தின் மூலம் பாவத்தின் நிமித்தம் உண்டாகும் தண்டனையையும், குற்ற மனசாட்சியையும் நம்மை விட்டு விலக்கி, தேவனிடத்தில் நீதிமானாகத் திரும்பத்தக்கதான வழியைக் காண்பித்துள்ளார். (ரோமர் 3:24-26;) மேலும் அவருடைய மரணத்தின் மூலமாக நாம் அவர் முன்பு நீதிமான்களாக வாழ்வதற்கு தேவையான கிருபையையும் பெறும்படி செய்திருக்கிறார்.  (ரோமர் 6:2-3; 2கொரி 5:15;கலா 2:20). இரட்சிப்பை பற்றியும் அதன் மூலமாக உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் பேதுரு கூறும் போது "குணமானீர்கள்"என்னும் பதத்தை பயன்படுத்துகிறான். (ஏசா 53:5;மத் 8:16-17) இயேசு கிறிஸ்து நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்த்தார் என்பதை விசுவாசியுங்கள். நம்முடைய ...

தேவனுடைய வார்த்தை

தேவனுடைய வார்த்தை ஏசா 55:10-11 "மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்: அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்." தேவனுடைய வார்த்தையின் தன்மை. தேவனுடைய வகளம் (அல்லது “கர்த்தருடைய வார்த்தை" அல்லது சுருக்கமாக "வார்த்தை”) என்பது வேதத்தில் பல சூழ்நிலைகளில் கூறப்பட்டுள்ளது.  1) முதலாவதாக தேவன் நேரடியாகப் பேசியவற்றைக் குறிக்கிறது. தேவன் ஆதரம் ஏவானோடு பேசியபோது கூறிய வார்த்தைகள் 'தேவ வார்த்தைகள்' ஆகும்.  (ஆதி 2:16-17; ஆதி 3:9-19). இது போலவே தேவன் ஆபிரகாமுடன்  (உம் ஆதி 121- 3)  ஈசாக்குடன் (ஆதி 26:1-5), யாக்கோபுடன்  (உம் ஆதி 28:13-15), மோசேயுடன் (உம். யாத் 3-4) பேசினார். சீனாய் மலையில் பத்துக் கட்டளைகளைக் கொடுத்தபோது தேவன் இஸ்ரவேலின் முழு தேசமக்களுடன் பேசினார்...

நீங்கள் நினையாத நேரம்

*நீங்கள் நினையாத நேரம்* *மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.*  (மத்தேயு 25:13). பிரசித்தி பெற்ற தேவ ஊழியர் திரு.டி.எல் மூடி அவர்கள் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய தவறு என்று ஒரு சம்பவத்தை விவரிக்கிறார். 1871-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி திரு. டி.எல் மூடி சிக்காகோவில் மிகப்பெரிய கூட்டத்திற்கு முன்னால் செய்தியை கொடுத்து கொண்டிருந்தார். அன்று அவர் பேசிய வசனம் ‘பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்’   (மாற்கு 15: 12) என்பதாகும். மூடி அவர்கள் முடிப்பதற்கு முன், ‘அடுத்த வாரம் நாம் கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்து தியானிக்க போகிறோம். அந்த சமயத்தில் நான் உங்களை கேட்பேன், இயேசுவை நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று, அதற்காக தயாராக வாருங்கள்’ என்று சொல்லி ஜெபித்து அனுப்பி வைத்தார். அந்த இரவில் தானே, மிகப்பெரிய தீ அந்த நகரில் பற்றி எரிந்தது. அந்த நகரத்தில் முக்கால்பாகம் சாம்பலாய் போனது. அநேகர் மரித்துப் போயினர். அன்றிலிருந்த...

பெரிய வெள்ளி

பெரிய வெள்ளி நமக்கு எதை கற்றுக் கொடுக்கிறது? பெரிய வெள்ளியின் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் - மரணம் ஓர் முடிவல்ல! பாஸ்டர் எஸ்.எம்.லாக்ரிட்ஜ் தமது சிறந்த பிரசங்கமாகிய “இது வெள்ளிக்கிழமை இரவு, ஆனால் ஞாயிற்றுக்கிழமை வருகிறது” என்பதில் பின்வருமாறு எழுதுகிறார் : அது வெள்ளிக்கிழமை. இயேசு ஜெபிக்கிறார். பேதுரு தூங்கிக் கொண்டிருக்கிறார். யூதாஸ் மறுதலிக்கிறார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அது வெள்ளிக்கிழமை. பிலாத்து திண்டாடுகிறார். ஆலோசனை சங்கம் சதி செய்கிறது. திரள் கூட்டம் பழிசுமத்துகிறது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பதுகூட அவர்களுக்கு தெரியவில்லை. அது வெள்ளிக்கிழமை. மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல சீஷர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர். மரியாள் அழுகிறார், பேதுரு மறுதலிக்கிறார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அது வெள்ளிக்கிழமை. ரோமர்கள், என் இயேசுவை அடிக்கின்றனர். சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்மூடி சூட்டுகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்பது தெரியவில்லை. அது வெள்ளிக்கிழமை. இயேசு கல்வாரிக்கு நடந்து செல்கிறார், பாருங்கள். அவ...

வேதம் எனது உணவு

*உந்தன் வேதம் எனது உணவு*  புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும். - (ஏசாயா 40:8). கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து வேதாகமமாவது இருக்கும். அதை படிக்கிறார்களோ இல்லையோ, வேதாகமத்தை வாங்கி வீட்டின் அலமாரியில் வைத்திருப்பது கிறிஸ்தவர்களின் பழக்கமாகி விட்டது. முன் நாட்களில் வேதாகமம் கிடைப்பது என்பது மிகவும் அரிதான காரியமாகும். இந்தியாவில் மட்டுமல்ல, கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லி கொள்ளும், இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் இதே நிலை! வேதாகம தட்டுப்பாட்டினால் பைபிள் சொசைட்டி என்று சொல்லப்படும் வேதாகம சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் வேதாகமம் அனைவருக்கும் கிடைக்கும்படியாக இந்த சங்கம் உதவி செய்தது. இந்த அமைப்பை ஆரம்பிப்பதற்கு ஒரு சிறுமிதான் காரணமாக இருந்தாள். அதை குறித்து பார்ப்போம். மேரி ஜோன்ஸ் என்னும் சிறுமி 1784ஆம் ஆண்டு, இங்கிலாந்திலுள்ள ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தாள். அவளுடைய தகப்பன் நெசவு தொழில் செய்பவராயிருந்தார். மேரி தன் 8ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டாள். அவளுடைய கிராமத்திற்கு தாமஸ் சார்லஸ் என்பவர் ஏழை குடும...

வாலிபம் இயேசுவுக்கே

வாலிபம் இயேசுவுக்கே! ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. - (எரேமியா 1:7).   ஒரு முறை காசி நகரில் கல்வியில் சிற்நத ஒரு சந்நியாசியுடன் சாது சுந்தர் சிங் உரையாடி கொண்டிருந்தார். அப்போது சந்நியாசி கூறினார், 'சாதுக்களின் ஒழுக்க முறைகளை குறித்துள்ள எங்களுடைய சட்டதிட்டங்க்ள போற்றத்தக்கவை. ஏனென்றால் முதலாவது, மாணாக்க நிலை, பின்னால் குடும்பஸ்தன், வாழ்க்கையின் பின் பாகத்தில குடும்ப கவலையிலிருந்து நீங்கி காட்டுக்கு செல்லுதல், பின் வயதான காலத்தில் சந்நியாசித்தல், அதாவது வெறுத்து விடுதல் என்பவை. ஆனால் நீங்கள் எடுத்து கொண்ட முறையோ விபரீதமானது. உங்கள் வாலிப பிராயத்திலே சந்நியாசியாகி விட்டீர்களே' என்றார். அதற்கு சுந்தர்சிங் 'நான் சாதுவானதன் நோக்கம் உங்கள் நோக்கத்திற்கு முற்றிலும் வித்தியாசமானது. கண்ணியம் கிடைக்குமென்று நான் சாதுவாகவில்லை. உலகத்தில் இடையூறுகளின்றி சாதுவாக எளிய வாழ்க்கை நடத்தி கிருபையாய் என்னை இரட்சித்தவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். எனக்...

ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ..

 *(403) ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ...!..?* பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். (1 யோவா 4:1) ஒவ்வொரு ஆவியையும் சோதித்தறிய வேண்டிய காரணம் (அதாவது ஒரு மனிதன் ஒரு ஆவியினால் அசைக்கப்பட்டிருப்பது அல்லது தூண்டுதல் பெற்றிருப்பது) அநேக கள்ளத் தீர்க்கதரிசிகள் திருச்சபைக்குள் நுழைந்திருப்பதே. இது முக்கியமான உண்மை, எப்படியென்றால் பரிசுத்த வேதாகமத்திற்குப் புறம்பான உபதேசத்தை சகித்துக் கொள்வது கடைசி காலத்தில் அதிகரிக்கிறது. (மத் 24:11; 1தீமோ 4:1; 2தீமோ:4:3-4; 2பேதுரு 2:1-2) ஐ வாசித்துப் பாருங்கள். *தங்களைக் கிறிஸ்துவ சுவிசேஷகர்கள், போதகர்கள், எழுத்தாளர்கள், பிரசங்கிகள், தீர்க்கதரிசிகள் என்று அறிக்கையிடும் எல்லாரையும், தனிப்பட்ட நபர் யாரும் அவனுடைய அல்லது அவளுடைய வேலை அல்லது செய்தி பரிசுத்த ஆவியினால் வருகிறது என்று உரிமை கோருபவரையும், சோதித்தறிய கிறிஸ்தவர்கள் கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள்.* ஒரு ஊழியம் அல்லது ஆவிக்குரிய அனுபவம் தேவனிடமிருந்து வந்தது என்று ஒருவர் கூறுவதா...

தெரியவே தெரியாது

  *(402) உயர்ந்த முத்துக்கள்.* * "உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறிகேடாகச் செயல்படுவோரே, என்னைவிட்டு அகன்று போங்கள்"* (மத் 7:23) இயேசு கிறிஸ்துவின் இந்த வார்த்தைகள் கீழ்க்கண்டவற்றைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. பிரசங்கிகள் 'இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நற்செய்தி'யை அறிவிப்பார்கள், அசுத்த ஆவிகளைத் துரத்துவார்கள். அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள். ஆனால் அவர்களுக்கோ கிறிஸ்துவின் மேல் இரட்சிப்புக்கெதுவான விசுவாசம் இருக்காது. 1) பரிசுத்த வேதாகமம் தெளிவாகப் போதிக்கிறது என்னவென்றால், இக்காலத்தில் ஊக்கமுள்ள சுவிசேஷ பிரசங்கமும், நீதிக்கான ஒரு போலியான வைராக்கியமும், அற்புதங்கள் செயல்படுதலும் சாத்தானின் வல்லமைனாலும் முடியும். எனவே தான் பவுல் மூலமாக பரிசுத்த ஆவியானவர் இப்படி எச்சரிக்கிறார். *"சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக் கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரிய மல்லவே"* (2கொரி 11:14,15; மத் 24:24) ஆவியானவர் பவுல் மூலமாக சாத்தானின் கிரியைகள் போலியான வல்லமை உள்ள அ...

என்னை விட்டு நீங்க

  *(401) உயர்ந்த முத்துக்கள்.* *என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும்.* (மத் 26:39) 'இந்தப்பாத்திரம்' என்று இயேசு கிறிஸ்து கூறியது அதிகமான விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. 1) கிறிஸ்து தம்முடைய சரீர மரணத்தின்று காக்கப்பட வேண்டும் என்று ஜெபித்தாரா ?  என்பது சந்தேகத்திற்குரியது.  ஏனெனில் மனித இனத்தின் பாவங்களுக்காக மரிப்பதற்கென்றே தீர்மானத்துடன் இவ்வுலகுக்கு அவர் வந்தார். (மாற் 10:33,34; லூக்கா 9:51;யோவா 12:24,27; எபி 10:5-9). 2) இயேசு கிறிஸ்து தேவனிடமிருந்து பிரிக்கப்படுதல் என்னும் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜெபித்தார் என்பது மிகவும் பொருந்தும்.  இதுவே பாவத்தின் இறுதியான தண்டனையாயிருந்தது. பாவிகளின் பாவங்களுக்காக, அவருடைய மாம்ச மரணம் முழுக்கிரயமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று இயேசு கிறிஸ்து ஜெபித்தார். எனினும், என்னுடைய சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆக கடவது என்று ஜெபித்தார். பின்னர் இயேசு கிறிஸ்து தமது மாம்ச சரீரத்தின் மரணத்துக்கும், ஆவிக்குரிய நிலையில் தமது பரலோக பிதாவிடமிருந்து, நம்முடைய இரட்சிப்புக்காக தாம் பிரிக்கப்படவ...

கிறிஸ்தவனின் தொடர்பு

இந்த உலகத்துடன் கிறிஸ்தவனுக்குத் தொடர்பு 1யோவா 2:15-16 "உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூறாதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தின் பிதாவின் அன்பில்லை, ஏனெனில் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவை களெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்" கிரேக்க மொழியில் காஸ்மாஸ் என்று அழைக்கப்படும் இந்த யுகத்தில் நாம் கானும் பரந்து விரிந்த அண்ட கோளத்தைக் குறிக்கிறது. அது இப்பொழுது தேவனைவிட்டுத் தனித்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சாத்தான் இதனை ஆளுகை செய்கிறான், உலகம் என்ற இந்த பதம் உலகத்திலுள தீமைகள், வேசித்தனம், பாவசிற்றின்பங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அதோடு, அது தேவனையும், அவருடைய வெளிப்பாடான வசனங்களையும் அசட்டை செய்யும் ஆவியையோ அல்லது அவற்றிற்கு 'எதிர்த்து நிற்கும் முரட்டாட்டமான ஆவியையோ குறிக்கும். அந்த ஆவி கிறிஸ்துவின் ஆளுகையில்லாத எல்லா மனித வர்க்கத்தினரிடமும் காணப்படும். இக்காலத்தில் சாத்தானானவன், இவ்வுலகத்தின் சிந்தனைகள், ஒழக்கவியல், தத்துவங்கள், மனோதத்துவம், ஆசைகள் ,ஆட்சிகள், கலாச்சாரங்க...