Posts

Showing posts from June, 2025

இரட்சிப்புக்கான வேதவார்த்தைகள்

ரோமர் 1:16 "கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. தேவன், இயேசுகிறிஸ்துவினால் நித்திய ஜீவனை நமக்கு இலவசமாகத் தருகிறார். ஆனால் அது நமக்குக் கிடைக்கும்படி சரியான முறையை அறிந்து கொள்வது சில வேளைகளில் நமக்குக் கடினமாக உள்ளது. ஆகவே தேவன், வேதாகமத்தில் இரட்சிப்புப்பற்றி, ஒவ்வொன்றும் தன் சொந்த தனிப்பட்ட முறையில் வற்புறுத்தும் வகையிலான பலதரப்பட்ட காட்சிகளைச் சித்தரிக்கிறார், இந்த கட்டுரை, அந்தக் காட்சிகளில் மூன்றான, இரட்சிப்பு, மீட்பு, நீதிமானாகுதல் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது. இரட்சிப்பு:  இரட்சிப்பு என்றால் (கிரே,) சொட்டேரியா ""விடுவித்தல்", "பத்திரமாகக் கொண்டுவருதல்", "தீமையினின்று பாதுகாத்தல்" என்று அர்த்தமாகும். ஏற்கெனவே பழைய ஏற்பாட்டில் தேவன் தம்மை, மக்களை இரட்சிக்கிற ஒருவராக வெளிப்படுத்தியுள்ளார். (சங் 27:1; 88:1;உபா 26:8; சங் 62:1;  ஏசா 25:6;53:5 குறிப்புகளை பார்க்கவும்) புதிய ஏற்பாட்டில் அது "வழி" அல்லது...

கொடிய சூழ்நிலையில் அமைதி

 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தனைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். - (பிலிப்பியர் 4:6-7) ஒரு முறை ஒரு இராஜா தன் நாட்டில் உள்ள ஓவியர்களுக்கு ஒரு போட்டியை வைத்தார். அதன்படி, ஒரு அமைதியான, அந்த படத்தை பார்த்தவுடன் சமாதானம் வரத்தக்கதாக அவர்கள் ஒரு ஓவியத்தை வரைந்து காட்ட வேண்டும். அநேகர் அந்த போட்டியில் கலந்து கொண்டார்கள். இறுதியில் இரண்டு ஓவியங்கள் மாத்திரம் தெரிந்தெடுக்கப்பட்டது. அதில் ஒரு ஓவியத்தில் அமைதியான ஒரு ஏரி, அதை சுற்றிலும் மரங்கள், அதற்கு பின்னால் நீல நிற மலைகள், அவை கண்ணாடியை போல அந்த ஏரியில் பிரதிபலித்தன. மேலே நீல நிற வானில் தவழ்ந்து செல்லும் மேகங்கள் என மிகவும் அருமையாக, அழகாக அந்த சித்திரம் தீட்டப்பட்டது. யார் அதை பார்த்தாலும், இதற்கு தான் முதல் பரிசு கிடைக்கும் என்று சொல்லும்படியாக இருந்தது. மற்ற ஓவியம், இதிலும் மலைகள் இருந்தன, ஆனால் அவை கரடுமுரடாக,...

பாடுவேன் பரவசமாகுவேன்

துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினாலே நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி.. - (எபேசியர் 5:18-21). ஒரு தாய் எப்போதும் 'எருசலேம் என் ஆலயம் ஆசித்த வீடதே' என்னும் பாடலை பாடி இருப்பார்கள். அதைக் கேட்டு, அவர்களுடைய சிறிய மகன் அந்தப் பாட்டின் வார்த்தைகளை மனப்பாடமாய் கற்று வைத்திருந்தான். அந்த தாயார் அவனது சிறு வயதிலேயே இறந்து போனதால், அவன் வாலிபனானபோது, ​​அவன் வேண்டாத நண்பர்களோடு சேர்ந்து, தன் வாழ்வைக் கெடுத்து, குடி போதை போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி, உயிர் போகும் நிலையில் ஒரு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்க்கப்பட்டான். அப்போது அவனுக்கு மருந்து கொடுக்க வந்த ஒரு செவிலி பெண், அவனது படுக்கையை ஒழுங்குபடுத்தி கொண்டே, அந்தப் பாடலை மெதுவாக பாடிக்கொண்டு தன் வேலையை செய்து கொண்டிருந்தாள். அதை கேட்ட அந்த வாலிபனுக்கு, பழைய நினைவுகள் வரத்தொடங்கின. தன் தாயின் ஞாபகம் வந்து, அவன் கண்களில் கணநீர் வரத்தொடங்கியது. அந்த நர்சிடம் 'தயவுசெய்து, அந்தப் ப...

தேவ ஊழியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள

1) தரிசனத்தை நோக்கி (பயணம்) செய்யாமலிருப்பது, 1இரா 19:8; தவறான பாதையில் பயணம், 1இராஜா 19:15 ல் பாதையை திருத்திய தேவன்  ("திரும்பி")  2) தரிசனத்திற்காக நேரத்தை, பணத்தை, ஆஸ்திகளை செலவழிக்க வேண்டும். 2கொரி 12:15: மாற் 2:4ல் மேற்கூறையை பிரிக்கவும் திரும்பவும் அதை சரி செய்யவும் செலவு செய்யப்பட்டன. அப் 9:36 ல் தொற்காள்(அ) தபீத்தாள் என்ற பெண் சீஷி செலவு செய்தால்.அப் 10 ஆம் அதிகாரத்தில் ஒரு கொர்நேலியு  மிகுந்த தர்மங்களை செய்தான்.  (அன்பு தேவ ஊழியர்களே பாட்டு பாடுவதும் ஆட்டம் ஆடுவதும் தரிசனமா ? பாடல் தரிசனம் அல்ல ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் சங்கீதம் பாடலாம் என்று தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், ஒரு பாட்டுக்கு பத்து லட்சம் வரை செலவு செய்கிறார்கள்.  இந்தியா நாட்டிலிருந்து அரபு நாட்டுக்கு போகிறான் வீடியோ எடுக்க  இது தரிசனமா ? உன் தரிசனம் என்ன ? பதில் : மத் 28:19,20; யூதா 1:22;நீதி24:11;  3) யாக்கோபு 3:2 ன்படி சொல் சொல் தவறாதவர்களாக இருக்கவேண்டும்.அதே போல சங்கீதம் 15:4 ன்படி தனக்கு நஷ்டம் வந்தாலும் சொன்னதை செய்து முடிக்கிறவர்களாக இருக்க வேண்டும். 4) ஒருவன் போத...

சிலுவையினால் ஒப்புரவாகுதல்

' முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி,  பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்' (எபேசியர்2:13-16). இரண்டு சகோதரர்கள் விவசாயிகளாக இருந்தார்கள். இருவருக்கும் பக்கத்து பக்கத்தில் வீடு இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி வந்தனர். 40 வருடங்களாக அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பொருட்களை பகிர்ந்து, அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு நாள் இருவருக்கும் இடையில் ஏதோ தகறாறு வந்து, இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்தனர். ஒருவரோடொருவர் பேசி கொள்வதையே நிறுத்தினர். ஒரு நாள் மூத்த சகோதரனுடைய வீட்டுக்கதவை யாரோ தட்டினார்கள். கதவை திறந்த போது, ஒரு தச்சன் நின்று கொண்டிருந்தார். அவர் அ...